12 ஆம் வகுப்பில் புதிய பாடத்திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

12 ஆம் வகுப்பில் புதிய பாடத்திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்


நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறும் வகையில் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளார்.


ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த பட்டியல் தயாராகி வருகிறது. இருப்பினும், அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற சட்டவரைமுறைகள் எதுவும் இல்லை. தனியார் பள்ளியிலும் சேர்க்கலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது.இருப்பினும் அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் ஆசிரியர்களை வாழ்த்துகிறோம்.

இந்தாண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 412 மையங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள 12 ஆம் வகுப்பு பாடத்திட்டம் நீட் தேர்வுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் நூறு சதவிதம் இதில் விடைத்தாள்கள் இருக்கிறது. எனவே மாணவர்கள் இதை படித்தாலே, நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்.

2013, 2014, 2017 ஆகிய வருடங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு, மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும். அதில் தேர்ச்சிப் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள் உயர்நிலைப் பள்ளிகளில் 10 கம்ப்யூட்டர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 20 கம்ப்யூட்டர்களும் இணைத்து, இன்டர்நெட் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்படும்.
டிசம்பர் மாதம் இறுதிக்குள் 92 ஆயிரம் ஸ்மார்ட்போர்டு உருவாக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதே போல், ஜனவரி மாத இறுதிக்குள் 1,500 பள்ளிகளில் விஞ்ஞான ஆராய்ச்சி செய்வதற்காக சிறப்பு ஆய்வகம் ஏற்படுத்தப்படும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ, ஷாக்ஸ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வகையில், வாரத்துக்கு ஒரு நாள் ஆங்கிலப் பேச்சு வகுப்புகள் நடத்தப்படும்’.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Subscribe Here