
தென் கொரியா உடனான கூட்டுக் கடற்படை பயிற்சியை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இரு நாடுகள் இடையே நடக்கவிருந்த முக்கிய கூட்டு ராணுவ பயிற்சியை கடந்த வாரம் பென்டகன் ரத்து செய்த நிலையில், தற்போது கடற்படை பயிற்சியையும் ரத்து செய்துள்ளது. சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை அமல்படுத்தும் நோக்கில் இம்முடிவை எடுத்துள்ளதாக பென்டகன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக