01/10/2015 news - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

01/10/2015 news

Sivakasi teacher karuppasamy.

1) இடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனுமதி ,தனியார் பள்ளிகளுக்கு!

2) ரிசர்வ் வங்கி அதிரடி: வீடு, வாகனக்கடன் சுமை குறையும்!

3) பணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு!

4)ஹிந்தித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் முன்னுரிமை ,!

5) காலாண்டுத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விதிமுறையை மீறி வகுப்பு நடத்தக் கூடாது!

http://Sivakasiteacherkaruppasamy.blogspot.com

இடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனுமதி ,தனியார் பள்ளிகளுக்கு!

அரசு நிர்ணயித்த அளவுக்கு, இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதனால், போதிய வசதிகள் இல்லாமல், சிறிய இடத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் எவ்வளவு பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என, தமிழக அரசு, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. பரப்பளவு மாநகராட்சி - ஆறு கிரவுண்ட்; மாவட்ட தலைநகர் - எட்டு கிரவுண்ட்; நகராட்சி - 10 கிரவுண்ட்; பேரூராட்சி - ஒரு ஏக்கர்; ஊராட்சி - மூன்று ஏக்கர் என, பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட பின், நீதிபதி சம்பத் கமிட்டி அளித்த பரிந்துரைப்படி, குறைந்த பரப்பளவில் செயல்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், 746 மெட்ரிக் பள்ளிகள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கீகாரமின்றி இயங்கி வருகின்றன.இந்நிலையில், சட்டசபையில் பள்ளிக் கல்வி அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 'குறைந்த பரப்பளவில் இயங்கும் பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, மெட்ரிக் இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார். அரசாணை அதன் அடிப்படையில், பள்ளிகளுக்கான பரப்பளவு நிபந்தனையை தளர்த்தி அங்கீகாரம் வழங்க, பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக, இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறைந்த பரப்பளவில் இயங்கும், 746 பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது.அங்கீகாரம் வழங்குவதற்கு முன், பள்ளிக் கட்டடத்துக்கு உள்ளாட்சி திட்ட அனுமதிபெறப்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் ஆய்வு செய்ய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், திட்ட அனுமதி இல்லாவிட்டாலும், அங்கீகாரம் வழங்க, மெட்ரிக் துறை உயரதிகாரிகள், வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.அதனால், பெட்டிக்கடை போல, சிறிய குறுகலான தெருக்களில், அடிப்படை பாதுகாப்பு வசதி இல்லாமல் செயல்படும் பள்ளிகளும், அங்கீகாரம் பெறும்முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில், பல பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கப்பட்டு விட்டதாக, மெட்ரிக் வட்டாரங்கள் கூறுகின்றன. அரசு மீது வழக்கு?குழந்தைகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, பெற்றோரின் கருத்தைக் கேட்காமல், மிகவும் குறுகலான இடங்களில் இருக்கும் பள்ளிகளுக்கும், அங்கீகாரம் அளிப்பதால், கும்பகோணம் சம்பவம் போல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, வழக்குத் தொடரவும், சில தொண்டு நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன.

ரிசர்வ் வங்கி அதிரடி: வீடு, வாகனக்கடன் சுமை குறையும்!

    ரிசர்வ் வங்கி நேற்று, குறுகிய காலக்கடனுக்கான வங்கி வட்டி விகிதத்தில், அதிரடியாக, 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகனங்கள் வாங்குவோருக்கான கடன் சுமை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சீன பொருளாதாரம் மந்தமடைந்து வருவதால், உலக பொருளாதாரத்தில் தடுமாற்றம் காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார தேக்கநிலை நிலவுகிறது. இதனால், இந்திய பொருளாதாரம் பாதிப்படைந்து, சிக்கலை சந்தித்து வருகிறது.இந்திய பொருளாதாரத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வேண்டுமென, தொழில் துறையினரும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தன. அதற்கு, அதிகமாக அழுத்தம் தரப்பட்டு வந்ததால், குறைந்தபட்சம், 0.25 சதவீதமாவது வட்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புநிலவியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் நான்காவது நிதிக் கொள்கையை, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், மும்பை யில் நேற்று வெளியிட்டார்.

பணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு!

  பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நலப் பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த முன்பணம் இப்போது உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் முன்னுரிமை ,

தமிழகத்தில் உயர்கல்வித் தகுதியுடன் ஹிந்தித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அத்துடன் ஹிந்தி தட்டச்சு தேர்ச்சி கூடுதல் தகுதியாகவும் கருதப்படுகிறது.இந்திய ரயில்வே, அஞ்சல் துறை, மத்திய அரசு சார்ந்த பொது நிறுவனங்கள், தில்லியை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனங்கள், முப்படைகள், எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றில் ஹிந்தி தேர்ச்சித் தகுதிக்காக கூடுதல் மதிப்பெண் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

காலாண்டுத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விதிமுறையை மீறி வகுப்பு நடத்தக் கூடாது!
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த, 26ம் தேதிமுதல், விடுமுறை விடப்பட்டு உள்ளது. வரும் 3ம் தேதி மற்றும், 5ம் தேதி என, இரண்டு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால், பல இடங்களில் தனியார் பள்ளிகள், சில நாட்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துவிட்டு, வகுப்புகளை துவங்கி விட்டன. இதனால், மாணவ, மாணவியர் குழப்பமடைந்து உள்ளனர்.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, பெற்றோர் புகார் அனுப்பினர். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர்கள் மூலம், பள்ளி நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.'அரசு அறிவித்த அட்டவணைப்படி மட்டுமே, வகுப்புகளை நடத்த வேண்டும். காலாண்டுத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விதிமுறையை மீறி வகுப்பு நடத்தக் கூடாது. மீறும் பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்புவதுடன், அங்கீகாரம் குறித்துமறுபரிசீலனை செய்யப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சிறப்பு வகுப்புக்கு அனுமதி காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த, கல்வித் துறை அனுமதிவழங்கியுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகளை இந்த ஆண்டு நடத்துகின்றன.

Details. http://Sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here