6%அகவிலைப்படி உயர்வு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

6%அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: அகவிலைப்படி 6% உயர்வு

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஆறு சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால், அரசு ஊழியர்களுக்கு ரூ.4,620 வரையிலும், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.2,310 வரையிலும் கூடுதலாகக் கிடைக்கும். இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு அலுவலர், ஓய்வூதியதாரருக்கு அகவிலைப்படியை ஜூலை 1 ஆம் தேதி முதல் 6 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஜூலை 1 ஆம் தேதி முதல் 6 சதவீதம் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தாளர்கள், வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அளிக்கப்படும். இந்த உயர்வால் அரசு அலுவலர்களுக்கு ரூ.366 முதல் ரூ.4,620 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.183 முதல் ரூ.2,310 வரையிலும் உயர்வு கிடைக்கும். அகவிலைப்படி உயர்வானது, ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக அளிக்கப்படும். இந்த உயர்வால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் பயன் அடைவர். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,501.24 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மக்கள் பணியில் புதிய உத்வேகத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள உதவும் என்று தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதன்மூலம், அகவிலைப்படியின் அளவானது 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயர்ந்தது. இந்த நிலையில், ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அகவிலைப்படியின் அளவு 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here