திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்,பதவி உயர்வு கலந்தாய்வு திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு வழங்க அக்டோபர் 26, 27, 30 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் 2015-16ஆம் ஆண்டுக்கு அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் பட்டதாரிஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை-2க்கான பொது மாறுதலும், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கலந்தாய்வும், திருநின்றவூரில் உள்ள ஜெயா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளன. 26-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை-2 ஆகியோருக்கு மாவட்டத்துக்குள் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.வரும் 27-ஆம் தேதி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். வரும் 30-ஆம் தேதி இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கலந்தாய்வு நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here