தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா - சிவகாசி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா - சிவகாசி

சிவகாசியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி விருதுநகர் மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

காலையில் கோப்பையநாயக்கன்பட்டி ஊ.ஒ.ஆ.பள்ளி தலைமையாசிரியர்    ச.ரமேஷ் அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலதலைலவர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.

பின்பு செப்டம்பர் 2 அகில இந்திய வேலைநிறுத்தம் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் தோழர்.மோசஸ் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

மாலை     இயக்க இதழ் இணையம் விழாவில் மாநில துணைத்தலைவர் தோழர் திருமதி மல்லிகா அவர்கள் இதழ் சந்தா பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில் மாவட்ட செயலாளர் திரு.வைரமுத்து வாழ்த்துரை வழங்கினார்.மாவட்டத்தலைவர் திரு.பரமசிவம் தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் திரு.செல்வகனேஷ் நன்றி  கூறினார்.விழாவில் சிவகாசி வட்டாரம் சார்பில் சீனிவாசன் கருப்பசாமி திருவில்லிப்புத்தூர் கண்ணன் வெம்பக்கோட்டை சார்பில் ராமதாஸ்  விருதுநகர் பாலசுப்பிரமணியன் திருச்சுழி சார்பில் மாயக்கண்ணன் அருப்புக்கோட்டை மகாதேவன் வத்திராயிருப்பு மகாதேவன் சாத்தூர் ராஜேஷ் ராஜபாளையம் முனியான்டி காரியாபட்டி பொருப்பாளரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவில் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here