பாலிமர் டிவி நெறியாளர் கண்ணன் விளக்கம்.......வைகோ வெளியேற்ற விவகாரம் .....சமூக வலைதளங்கள் அரசியலை ஆட்டிப்படைக்கின்றனவா? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பாலிமர் டிவி நெறியாளர் கண்ணன் விளக்கம்.......வைகோ வெளியேற்ற விவகாரம் .....சமூக வலைதளங்கள் அரசியலை ஆட்டிப்படைக்கின்றனவா?

தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ரூ.500 கோடியும் 80 தொகுதிகளும் கொடுப்பதாக பேரம் பேசியது என மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியிருந்தார். இது தொடர்பாக வைகோவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என வைகோவும் கூறியிருக்கிறார். நாங்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் திமுக இதை திரும்ப பெற்றுவிடவேண்டும் என்று ஆவேசப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பாலிமர் செய்திதொலைக்காட்சிக்கு வைகோ பேட்டி அளித்தபோது, ’’தி.மு.க தரப்பில் ரூ.500 கோடி கொடுக்க முன்வந்தார்கள்...80 இடங்கள் கொடுக்க முன்வந்தார்கள் என்கிறது உங்களது குற்றச்சாட்டு. அது தவறு. அதுமட்டுமல்ல அதிமுகவின் பி டீமாக செயல்படுகிற வைகோ அவர்கள் தலைமையில் இயங்குகிற அந்த அமைப்புக்கு ரூ1,500 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது.......’’ என்று செய்தியாளர் கேள்வியை கேட்டு முடிப்பதற்குள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியை பாதியில் முடித்து காலர் மைக்கை கழற்றி போட்டுவிட்டு வெளியேறி சென்றார். நான் அடுத்து என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் கேளுங்க கேளுங்க என்று செய்தியாளர்கள் சொல்லச் சொல்ல வைகோ அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அறையை விட்டு வெளி யேறினார்.

இது குறித்து பாலிமர் தொலைக்காட்சியின் நெறியாளர் தரும்  விளக்கம்:எங்கள் நிறுவனத்திற்கு எந்த அரசியல்வாதி மீதும் சொந்த விருப்பு வெறுப்பு ஏதுமில்லை. நான் மதிக்ககூடிய தலைவர்களில்  வைகோவும் ஒருவர்.கேள்வியை முழுவதுமாக கேட்பதற்கு முன் கோபப்பட்டு வெளியேறினார் கேளுங்கள் கேளுங்கள் என கூறியதை கவனிக்காமல் வெளியேறினார்.
.சமூக வலைதளங்களின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி அது.என்று கண்ணன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here