இப்படித்தான் இருக்கிறார் எம்.நடராஜன் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி, சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இப்படித்தான் இருக்கிறார் எம்.நடராஜன் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி, சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையி



உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி, சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்குப் பின்னால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த எம்.நடராஜனின் தற்போதைய புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது.

சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, நுரையீரல் சேதம் ஆகிய பாதிப்புகளோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி நடராஜனின் மனைவி சசிகலா பரோலில் வந்து தன் கணவரை மருத்துவமனையில் சந்தித்தார். ஐந்து நாட்கள் பரோலில் வந்த சசிகலா, தொடர்ந்து நடராஜனை சந்தித்து வந்த நிலையில் அவருக்கு மன ரீதியாக தெம்பு அளிப்பதாக அமைந்தது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் நடராஜன் உடல் நிலை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ’’மருத்துவமனையின் கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் மற்றும் சீறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை செய்து மாற்றப்பட்ட கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய இரண்டு உறுப்புகளும் சிறப்பாகச் செயல்படுகின்றன.

நுரையீரலில் ஏற்பட்ட சேதமும் குணமடைந்துவருகிறது. இருப்பினும் சுவாசத்தைச் சீராக்குவதற்காக டிரக்யாஸ்டமி அறுவைச் சிகிச்சை செய்து கழுத்தில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது; இதன் வழியாகத் தேவைப்படும்போதெல்லாம் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

அவர் கண் விழித்து இயல்பாக இருக்கிறார். தகவல்களைப் பரிமாறவும் செய்கிறார். கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பும், கவனிப்பும் தேவைப்படுகிறது. நடராஜனின் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினருக்கு முழுவதுமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் ஓரிரு நாட்களுக்கு முன் நடராஜன் மருத்துவர்களோடு இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டு அவரது உறவினர்கள் வழியாகப் பகிரப்பட்டுவருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here