#கோதுமை #புல் #பலன்கள் : சர்க்கரை வியாதிக்காரங்களும், சர்க்கரை வியாதி வந்திடுமோன்னு பயப்படறவங்களுக்கும், அற்புதமான விஷயம் இந்த கோதுமை புல். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

#கோதுமை #புல் #பலன்கள் : சர்க்கரை வியாதிக்காரங்களும், சர்க்கரை வியாதி வந்திடுமோன்னு பயப்படறவங்களுக்கும், அற்புதமான விஷயம் இந்த கோதுமை புல்.


அருகம்புல் சாறு குடிக்கிறது மாதிரி, இந்த கோதுமை புல் சாறும் நல்லது். கோதுமை புல் சாறுல என்னென்ன சத்துக்கள் இருக்கு?
புல் வகையைச் சேர்ந்த இந்த் செடி முழுசுமே மருந்தாகும். நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மக்னீசியம், அமினோ அமிலம், விட்டமின் – B1, B2, A, B 1, 2, 3, 5, 6, 8 & 12 C, E & K மற்றும் நியாசின் இப்படி பலவிதமான சத்துக்களை உள்ளடக்கியது.
சரி இதனால என்ன பலன்?
1. இரத்தத்தை சுத்தம் செய்யும். உடலில் ஹீமோகுளோபின் அளவை சீராக்கும்.
2. நீண்டகாலமாக மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் இரத்தத்தில் சேர்ந்திருக்கும் நச்சு கழிவுகளை வெளியேற்றும்.
3. பெருங்குடலை சுத்தம் செய்யும்.
4. மலச்சிக்கலை போக்கும்.
5. உயர் இரத்த அழுத்தம் குறைய உதவி செய்யும்.
6. முகப்பரு மற்றும் உடலில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறைய உதவும்.
7. உடலில் ஆக்ஜிஸன் அளவை சமன்படுத்தும்.
8. இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் உடல் சோர்வு, பாத எரிச்சல், குத்தல் போன்றவற்றை சரிசெய்யும்.
9. நரைமுடி 50 வயதுவரை வராது. இளமையாக வாழ விரும்புபவர்கள் கோதுமைபுல் சாறு (அ) பொடியை தொடர்ந்து எடுக்கலாம்.
10. அதிகப்படியான கொழுப்பு உடலில் கூடுவதை தடுப்பதோடு, செரிமாணத்தை சீர்படுத்தும்.
11. சிறுநீரக சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அதாவது சிறுநீரக பாதையில் உண்டாகும் தொற்று, விரைவீக்கம், சிறுநீரக கற்கள், அடிக்கடி சிறுநீர் கழித்தல்(அ)போன்ற உணர்வு இவற்றிலிருந்து விடுபட பேருதவி புரியும்.
12. சுவாசமண்டலத்தை சீராக்கும். நுரையீரல் தொற்று, சளி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல், தொண்டை வலி இவற்றிலிருந்து காப்பாற்றும்.
13. ஆரம்ப கால நிலையில் உள்ள முட்டிவலிகளை குணமாக்கும்.
14. ஹீமோகுளோபின் குறைபாட்டினால் அவதியுறும் குழந்தைகளுக்கு (Beta Thalessemia என்கிற வியாதி) தொடர்ந்து 18மாதங்களுக்கு கோதுமைபுல் சாறை காலை வெறும் வயிற்றில் கொடுத்துவர அந்த வியாதியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
15. இந்த சாற்றை கொப்புளித்தால் தொண்டை புண் சீக்கிரமே ஆறும். தொண்டை கரகரப்புக்கு நீங்க “கிச் கிச்” மாத்திரை எல்லாம் எடுக்க வேண்டாம். சிலருக்கு பல் ஈறுல வீக்கம் ஏற்பட்டு இரத்தம் கசியும். சீழ் வரும். இதை இந்த கோதுமை சாறு குணமாக்கும்.
16. வெண்புள்ளி, தேமல் மற்றும் சொரியாஸிஸ் போன்ற சரும வியாதிகள் குணமாகும்.
17. இதெல்லாம் விட ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்....கேன்சர் நோய் உள்ளவங்க இந்த சாற்றை(அ)பொடியை தொடர்ந்து எடுத்து வந்தா கேன்சர் செல்கள் அழியும். கேன்சர் செல்கள் உருவாகாமல் தடுக்கும்.
உங்க வீட்ல நீங்களே விதைக்கலாம்.  ஒரு கிலோ கோதுமை வாங்கலாம். ஒரு பத்து பிளாஸ்டிக் ட்ரே (அ) ஸ்வீட் பாக்ஸ் (அ) சின்ன மண்தொட்டிகள் வாங்கலாம்.
அதுல கொஞ்சம் மண்ணும், எருவும் கலந்து நிரப்பி வைச்சுக்கலாம். வாங்கிட்டு வந்த கோதுமைல ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஏழெட்டு மணி நேரம் ஊற வச்சு, அப்புறம் அத ஒரு துணில கட்டி லேசா காத்தாட விடலாம். மறுநாள் பார்த்தீங்கன்னா அந்த கோதுமை விதைகள் முளை விட்டிருக்கும். நாம ஏற்கெனவே ரெடி பண்ணி வச்சிருக்க டிரே, மண்தொட்டியில இந்த முளைத்த கோதுமையை தூவி அப்படியே மேலயும் கொஞ்சம் மண்ணை தூவி ஒரு நாளைக்கு ஒரு முறை தண்ணி தெளிச்சா அழகா முளைச்சு வரும். இப்படி இரண்டு நாளைக்கு ஒரு ட்ரேன்னு, பத்து ட்ரேல ரெடி பண்ணிக்கலாம் சத்தான கோதுமைபுல்லை.
ஒரு மூணு – நாலு இன்ச் அளவு வளர்ந்த கோதுமை பயிரை கத்தரித்து எடுத்து அதை மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றி நல்லா அடிச்சு வடிகட்டி குடிக்கணும். இதான் கோதுமைபுல் ஜூஸ். எப்போ வேணும்னாலும் குடிக்கலாம்.
வெறும் வயித்துல குடிச்சா பலன் அதிகம்.

நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைஞ்ச கோதுமைபுல்ல இனி நாம தவற விடவே கூடாது. கோதுமை புல் குடிக்கறோம். ஆரோக்கியமா வாழறோம். ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here