*♨தமது காலணிகள் மாயமானதால், குடித்து விட்டு வந்து மாணவர்களை ஆசிரியர் அடித்ததாகப் புகார்♨* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*♨தமது காலணிகள் மாயமானதால், குடித்து விட்டு வந்து மாணவர்களை ஆசிரியர் அடித்ததாகப் புகார்♨*

☀விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் தமது காலணிகள் மாயமானதால், குடித்து விட்டு வந்து மாணவ மாணவிகளை ஆசிரியர் அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

☀கள்ளக்குறிச்சியில் உள்ள டேனிஷ் மிஷன் பள்ளியில் பணிபுரியும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் விஜயகுமாரின் காலணிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது.

☀இதையடுத்து இன்று அவர் பள்ளிக்கு குடித்து விட்டு வந்ததாகவும், வகுப்பறைக் கதவுகளை பூட்டி விட்டு மாணவர்களை பிரம்பால் அடித்ததாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டனர்.

☀தகவல் அறிந்து அங்கு வந்த  கள்ளக்குறிச்சி போலீசார் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here