வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை 👇👇👇 இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை 👇👇👇 இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது


* வாழ்வென்பது உயிர் உள்ளவரை.

* தேவைக்கு செலவிடு.

* அனுபவிக்க தகுந்தன அனுபவி.

* இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

* இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

* போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை.

* ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

* மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

* உயிர் பிரிய தான் வாழ்வு; ஒரு நாள் பிரியும்.

* சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

* உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு.

* உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.

* உன் குழந்தைகளை பேணு.

* அவர்களிடம் அன்பாய் இரு. அவ்வப்போது பரிசுகள் அளி.

* அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.

* பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட; பாசமாய் இருந்தாலும்,

பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ,

உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.

* அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள்;

உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்;

* உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென,

வேண்டிக் கொள்ளலாம், பொறுத்து கொள்.

* அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை, அன்பை அறியார்.

* அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.

* இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு;

ஆனால், நிலைமையை அறிந்து அளவோடு கொடு.

* எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே,

* எல்லாமே இறந்த பிறகு என, உயில் எழுதி வைத்திராதே!

* நீ, எப்போது இறப்பாய் என எதிர்பார்த்து காத்திருப்பர்.

* எனவே கொடுப்பதை கொடுத்து விடு, தரவேண்டியதை பிறகு கொடு.

* மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

* மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.

* அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.

* பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.

* நண்பர்களிடம் அளவளாவு.

* நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி;

* இறை பக்தி கொண்டு; குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ். 

* இன்னும்; இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள்; சுலபமாக ஓடிவிடும்.

* வாழ்வை கண்டு களி! ரசனையோடு வாழ்! வாழ்க்கை வாழ்வதற்கே!

* நான்கு நபர்களை புறக்கணி!

🤗 மடையன்

🤗 சுயநலக்காரன்

🤗 முட்டாள்

🤗 ஓய்வாக இருப்பவன்

* நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!

😏 பொய்யன்

😏 துரோகி

😏 பொறாமைக்கைரன்

😏 மமதை பிடித்தவன்

* நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!

😬 அனாதை

😬 ஏழை

😬 முதியவர்

😬 நோயாளி

* நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!

💑 மனைவி

💑 பிள்ளைகள்

💑 குடும்பம்

💑 சேவகன்

* நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!

🙋‍♂ பொறுமை

🙋‍♂ சாந்த குணம்

🙋‍♂ அறிவு

🙋‍♂ அன்பு

* நான்கு நபர்களை வெறுக்காதே!

💆 தாய்

👳 தந்தை

👷 சகோதரன்

🙅 சகோதரி

*நான்கு விசயங்களை குறை!

👎 உணவு

👎 தூக்கம்

👎 சோம்பல்

👎 பேச்சு

* நான்கு விசயங்களை தூக்கிப்போடு!

🏃 துக்கம்

🏃 கவலை

🏃 இயலாமை

🏃 கஞ்சத்தனம்

* நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!

👬 மனத்தூய்மை உள்ளவன்

👬 வாக்கை நிறைவேற்றுபவன்

👬 கண்ணியமானவன்

👬 உண்மையாளன்

* நான்கு விசயங்கள் செய்!

🌷 தியானம் , யோகா

🌷 நூல் வாசிப்பு

🌷 உடற்பயிற்சி

🌷 சேவை செய்தல்

☘☘☘☘☘☘☘☘☘

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here