அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு*

தேனி மாவட்டம் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க நெற்றித்திலகமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இவர்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்.

நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், மேளதாளம் முழங்க நெற்றித்திலகமிட்டு மாலை அணிவித்து வரவேற்றனர்.

தலைமை ஆசிரியர் மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பையா, பொருளாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here