நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 2 மாணவர்களுக்கு ஜாமின் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 2 மாணவர்களுக்கு ஜாமின்




மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 2 மாணவர்களுக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் தந்தையர் இருவரின் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தள்ளுபடி செய்தார். மாணவர்கள் முக்கிய குற்றவாளிகள் அல்ல என்பதால் அவர்கள் நலன் கருதி ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நிதிபதி கருத்து தெரிவித்தார்.
மேலும் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோரும், பிரவீன் தந்தை சரவணன், ராகுல் தந்தை டேவிட் ஆகியோரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர்.
அவர்களது சார்பில் வக்கீல் விஜயகுமார், மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஏற்கனவே நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யா விடுவிக்கப்பட்டார். அதனை மேற்கோள்காட்டி மாணவர்கள் என்பதால் அவர்களது எதிர்காலம் கருதி பிரவீன், ராகுல் ஆகியோருக்காவது ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2 மாணவர்களுக்கு மட்டும் ஜாமின் வழங்கி, அவர்களின் தந்தையார் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

Subscribe Here