7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலி




திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலி
தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் 12 வயது மகள் யோகேஸ்வரி திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள சி.எஸ்.ஒ. உயர்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த வாரம் யோகேஸ்வரிக்கு காய்ச்சல் வந்ததையடுத்து பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் யோகேஸ்வரிக்கு காய்ச்சல் அதிகமாகவே மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும் , அங்கிருந்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு யோகேஸ்வரிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். திருத்தணி அருகே டெங்கு காய்ச்சலுக்கு நேற்று 11 மாத குழந்தை ஒன்று பலியான நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe Here