குரூப்-1 நேர்முகத் தேர்வு மாற்றமில்லை - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

குரூப்-1 நேர்முகத் தேர்வு மாற்றமில்லை - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்


உள்ளாட்சித் தேர்தல் காரணமாக குரூப்-1 நேர்முகத் தேர்வு உள்ளிட்ட சில தேர்வுகள் தள்ளி வைக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு 22.12.2019 முதல் 30.12.2019 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு 05.01.2020 முதல் 12.01.2020 வரை நடைபெறும்.
மற்றபடி குரூப்-1 (தொகுதி – 1)- ல் அடங்கிய பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு திட்டமிட்டபடி 23.12.2019 முதல் 31.12.2019 வரை (25.12.2019 மற்றும் 29.12.2019 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

Subscribe Here