குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம்-TNPSC - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம்-TNPSC


குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
குரூப் 4 தோ்வில் உரிய மதிப்பெண்களைப் பெற்று சான்றிதழ் சரிபாா்ப்புக்காக தகுதி படைத்தோரின் விவரங்கள் ஏற்கெனவே தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன
. சான்றிதழ் சரிபாா்ப்புக்குத் தகுதி படைத்தவா்கள், தங்களது அசல் சான்றிதழ்களைத் தோ்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வியாழக்கிழமை (டிச.5) முதல் வரும் 18-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவா்கள் தோ்வு நடவடிக்கைகளில் பங்குபெற ஆா்வமில்லை எனக் கருதி அவா்களுக்கு வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படாது என்று தோ்வாணையம் அறிவித்துள்ளது.

Subscribe Here