கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் மற்றும் கேரள எல்லையோர மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் மற்றும் கேரள எல்லையோர மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிப்பு


சென்னை: கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மார்ச் 16ம் தேதி முதல் மார்ச். 31ம் தேதி விடுமுறை
என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் பரவும் கொரேனா வைரஸ் காரணமாக நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா,
கர்நாடகா மாநிலங்களில் மக்கள் அதிகம் கூடும் தியேட்டர், மால்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா தொற்றை தவிர்க்கும் விதமாக தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மார்ச். 16 முதல் வரும் மார்ச். 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

தமிழகத்தில் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களான
குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி, தென்காசி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி முதல் 5 வகுப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe Here