CBSE தேர்வு தேதி திடீர் மாற்றம் : புதிய அறிவிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

CBSE தேர்வு தேதி திடீர் மாற்றம் : புதிய அறிவிப்பு


சமீபத்தில் டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென அந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. இந்த சம்பவத்தால் ஒரு வாரம் வரை வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. எனவே அந்த பகுதியில் நடைபெற வேண்டிய பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற வடகிழக்கு டெல்லி பகுதியில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ புதிய தேர்வு அட்டவணையை சற்றுமுன் சி.பி.எஸ்.இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது
அதன்படி சி.பி.எஸ்.இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 30ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளதாகவும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 21ஆம் தேதி சி.பி.எஸ்.இ தேர்வுகள் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த புதிய அட்டவணையின்படி வடகிழக்கு டெல்லி பகுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுத தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Subscribe Here