இந்த வார ராசிபலன் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்த வார ராசிபலன்

 


 

திங்கள் முதல் ஞாயிறு வரை (16.11.2020 – 22.11.2020 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்: சந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் தரும்.
அசுவினி: தன வரவு அதிகரிப்புக்கான செயல்கள் இந்த வாரத்தில் நடக்கும். சுபச்செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்ப்பது நல்லது. பிறரை அனுசரித்து செல்வது முன்னேற்றம் தரும்.

பரணி: சொத்துக்களை வாங்கும் போதும், விற்கும் போதும் கவனமாக இருப்பது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரிகளுக்கு கடன் பாக்கிகள் தாமதமாகவே வசூலாகும்.

கார்த்திகை 1: பிறர் நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு விருப்பமில்லாத பணியிடமாற்றம் ஏற்படலாம். பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது. காதல், திருமண உறவு விஷயங்களில் நிதானமனக செயல்படுங்கள்.

சந்திராஷ்டமம்: 16.11.2020 காலை 6:00 – 17.11.2020 மாலை 4:36 மணி
……………
ரிஷபம் : புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு. துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
கார்த்திகை 2,3,4: பணியாளர்களுக்கு அலைச்சலுக்கு பிறகே கடினமான விஷயம் கைகூடும். உங்கள் மேல் பிறர் வைத்த மரியாதை குறையாதபடி கவனமாக இருங்கள். யாருடைய குடும்ப விஷயத்திலும் தலையிடாதீர்கள்.

ரோகிணி: சகஊழியர்களின் விஷயத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சந்தோஷமும், மன நிம்மதியும் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் ஆதரவு தள்ளிப்போகும். தன்னம்பிக்கை குறையாதிருங்கள்.

மிருகசீரிடம் 1,2: பிள்ளைகள் பற்றிய சிறு கவலை மேலோங்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவி செய்வர். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் முயற்சியில் தொய்வு ஏற்படும்.

சந்திராஷ்டமம்: 17.11.2020 மாலை 4:37 – 19.11.2020 இரவு 9:03 மணி
……………
மிதுனம் : ராகு, கேது, சுக்கிரன் அதிர்ஷ்டகர பலன்களை வழங்குவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மிருகசீரிடம் 3,4: தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். நீங்கள் மேற்கொள்ளும் விடாமுயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும். உடல்நலம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

திருவாதிரை: திட்டமிட்டவை சிறு தடைகளுக்குப் பிறகு நல்ல முறையில் நடக்கும். உங்கள் உழைப்பிற்கு பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம். பிள்ளைகளிடம் அன்பாக பேசுங்கள். வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது.

புனர்பூசம் 1,2,3: ஆடை, ஆபரணங்ள் வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்ட விஷயங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். சகபணியாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம்: 19.11.2020 இரவு 9:04 – 21.11.2020 நள்ளிரவு 3:39 மணி
……………
கடகம் : சூரியன், குரு, சந்திரன் நற்பலன்களை அள்ளி வழங்குவர். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.

புனர்பூசம் 4: வியாபாரிகள் மன நிறைவு காண்பீர்கள். மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பெண்களுக்கு தோற்றப் பொலிவு கூடும்.

பூசம்: மனதில் நிலவிய சோர்வுகள் நீங்கும். காணாமல் போன முக்கிய பொருள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள்.

ஆயில்யம்: பெற்றோரின் ஆதரவு கிட்டும். உங்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த வாரம் வரவு மற்றும் செலவு என கலவையான வாரமாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: 21.11.2020 நள்ளிரவு 3:40 மணி – 22.11.2020 நாள் முழுவதும்
……………

சிம்மம் : ராகு, சந்திரனால் நற்பலன் உண்டு. பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.
மகம்: தொழில் துறையில் முன்னேற்றம் இருக்கும். காதல், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். நிதானமாக பேசி அதிக நன்மை காண்பீர்கள்.

பூரம்: பிறரிடம் அனுசரித்து செல்வது வெற்றிக்கு உதவும். பாக்கிகள் வசூலாகி நிம்மதி அளிக்கும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை ஏற்படும். முயற்சி வெற்றி தரும்.

உத்திரம் 1: இளைஞர்கள் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது. கலைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி இந்த வாரம் அமையும். திட்டமிட்டபடி நினைத்ததை சாதிப்பீர்கள். பணியிடத்தில் நிலவிய பகைமை தீரும்.
……………
கன்னி : கேது, சுக்கிரன், சந்திரன் அனுகூல பலன்களை வழங்குவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

உத்திரம் 2,3,4: குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு பாசம் காட்டுவார்கள். வழக்கு சம்மந்தமாக சமாதான தீர்வுக்கு வாய்ப்புள்ளது. தந்தையின் உடல் நலம் காரணமாக மருத்துவ செலவுகள் ஏற்படும்.

அஸ்தம்: வீண் செலவுகள் உண்டாகும். நெருப்பு, இயந்திரம் போன்றவற்றில் மிகக் கவனமாக இருப்பது அவசியம். உங்களின் வேலைச்சுமைக்கு ஏற்றபடி சலுகைகள், ஊக்கத் தொகை கிடைக்கும்.

சித்திரை 1,2: மனைவி வழி உறவினரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். வியாபாரத்தில் புதிய செயல்களின் மூலம் லாபம் ஈட்டுவது நல்லது. துலாமதுலாம் : சுக்கிரன், புதன், சந்திரன் அனுகூல அமைப்பில் உள்ளனர். கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.

சித்திரை 3,4: வருமானத்தை உயர்த்த நேர்மையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.

சுவாதி: மனதில் உற்சாகம் பிறக்கும். சில விஷயங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முயற்சித்தால் முடியாது.

விசாகம் 1,2,3: புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சிகளில் உடனே வெற்றி ஏற்படும். உடல்நலம் படிப்படியாக மேம்படும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
……………
விருச்சிகம் : குரு, புதன், சந்திரன் அதிர்ஷ்டகர பலன்களைத் தருவர். சூரியன் வழிபாடு வளம் தரும்.

விசாகம் 4: சக பணியாளர்கள் உதவுவார்கள். சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. மற்றவர்கள் மனம் காயப்படும்படி பேச மாட்டீர்கள். எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள்.

அனுஷம்: சிலரது செயலால் புண்பட்டிருந்த மனதுக்கு ஆறுதல் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு அகலும். பாகப்பிரிவினை பற்றிச் சிந்திப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் ஏற்பட்டு மகிழ்வீரகள்.
கேட்டை: இக்கட்டான நேரத்தில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சுய தொழிலில் மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பிரச்னை நல்ல முடிவிற்கு வரும்.
………..
தனுசு : புதன், சுக்கிரன், சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.

மூலம்: வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். வாகனத்தின் மூலம் விரயம் ஏற்பட்டு சரியாகும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

பூராடம்: புதுமையான சிந்தனையுடன் செயல்பட்டு சிறப்படைவீர்கள். எதையும் நன்கு யோசித்து முடிவு எடுப்பது நல்லது. முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்பட்டு விலகும். நண்பர்களுக்கு ஆலோசனை வழங்குவீர்கள்.

உத்திராடம் 1: எந்த ஒரு வேலைக்கும் கூடுதல் அலைச்சல் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் மிகுந்த கவனம் தேவை. பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்னைகள் உருவாகக்கூடும்.
………..
மகரம் : புதன், சுக்கிரன், செவ்வாய், சந்திரன் கூடுதல் நற்பலன்களை தருவர். காமாட்சி வழிபாடு சுபிட்சம் தரும்.

உத்திராடம் 2,3,4: சகோதரர்கள் வழியில் ஏதேனும் சிறு பிரச்னை வரலாம். தொழில் சிறப்பாக நடக்கும். பயணங்கள் மூலம் கூடுதல் லாபம் பெறுவீர்கள். எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும்.

திருவோணம்: சொத்து வழக்கு சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும். சொந்த பந்தங்கள் உதவிகரமாக இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மையை தவிர்ப்பது நல்லது. புதிய பாதை புலப்படும்.

அவிட்டம் 1,2: தொழிலை விரிவுபடுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். பணியாளர்களின் திறமை வெளிப்படும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
…………..
கும்பம் : சந்திரன், சனி அனுகூல பலனைத் தருவர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

அவிட்டம் 3,4: மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். கணவன், மனைவி இடையே அனுசரித்து சென்றால் மகிழ்ச்சி ஏற்படும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும்.
சதயம்: தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். வர வேண்டிய பணம் குறித்த நேரத்தில் கைக்கு வரும்.

பூரட்டாதி 1,2,3: பிள்ளைகள் விரும்பிய கல்வியில் இருப்பதால் மனம் மகிழும். கணவர் மீது அக்கறை கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
…………….
மீனம் : குரு, ராகு நற்பலன்களை வழங்குவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
பூரட்டாதி 4: வழக்கு, விவகாரங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பச் செலவுகள் குறையும். வீண் கவலைகள் தீரும்.

உத்திரட்டாதி: கடந்த வாரம் நிலவிய மனச்சோர்வு நீங்கும். மாற்று இனத்தவர் ஒத்துழைப்பு செய்வதால் வளம் கூடும். எதிர்காலம் பற்றி எடுத்த முடிவு திருப்தி தரும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.

ரேவதி: அதிக வாடிக்கையாளர்கள் வருவதால் வருமானம் கூடும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அறை குறையாக நின்ற வேலைகள் முடியும். திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கக் கூடிய அமைப்பு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here