15 நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி ? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

15 நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி ?

 பொதுவாக ரேஷன் கார்டு என்பது பொருட்களை வாங்க மட்டும் அல்லாது, இன்றைய காலக்கட்டங்களில் சிலிண்டர் வாங்கவும், அடையாள ஆவணமாகவும் உள்ளது.


குறிப்பாக தமிழ் நாட்டில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பததாரரின் பெயர் வேறு எந்த ரேஷன் கார்டிலும் இருக்க கூடாது.


குடும்பத்தின் வருவாயை பொறுத்து ரேஷன் கார்டு 5 வகைகளில் உள்ளது. ஆக உங்களுக்கு ஏற்ற ஒரு கார்டினை தேர்தெடுத்து விண்ணப்பிக்கலாம். இந்த கார்டு எந்த வகையை சார்ந்தது என்று, ரேஷன் அட்டையில் உள்ள குறியீட்டினை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


ரேஷன் கார்டின் வகைகள்

PHH என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும்.


இதே PHH – AAY என்ற குறியீடுள்ள ரேஷன் கார்டுக்கு, 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.


NPHH என்று குறிப்பிடப்பட்டுள்ள ரேஷன் கார்டில், அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.


NPHH – s என்ற குறியீடு உள்ள ரேஷன்கார்டுக்கு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம். அரிசி கிடைக்காது.


ரேஷன் அட்டையில் NPHH – Nc என்று குறிக்கப்பட்டிருந்தால், அதை ஒரு அடையாளமாகவும், முகவரிக்கான சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும். நியாய விலைக்கடையில் எந்த பொருளும் வாங்க முடியாது.


முதலில் பெயரை நீக்குங்கள்? 

முதலில் பெயரை நீக்குங்கள்?

அதெல்லாம் சரிங்க. எப்படி 15 – 20 நாளில் ரேஷன் கார்டு வாங்குவது எப்படி? முதலாவது புதியதாக திருமணமானவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி தனியாக பிரித்து கார்டு வாங்குவது என்பதை பார்க்கலாம் வாங்க. இதற்கு முன்னதாக உங்களது பழைய ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்க வேண்டும். இதற்காக சரியான ஆவணங்களை கொடுத்து (திருமண பதிவு சான்று அல்லது தக்க சான்றுகள்) நீக்கிக் கொள்ளலாம்.


இதனையெல்லாம் கவனியுங்க 

 

இதனையெல்லாம் கவனியுங்க

முன்பெல்லாம் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டுமெனில், குழந்தைகளின் பிறப்பு சான்று மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது ஆதார் கார்டும் தேவை. ஆதார் கார்டினை கொடுக்காவிட்டால், உங்களால் கூடுதல் பொருட்களை வாங்க முடியாது. ஆக குழந்தைகளுக்கும் ஆதார் கார்டினை பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம். அப்படி இல்லையேல் மற்றவர்களின் பெயரை சேர்த்து விட்டு, குழந்தைக்கு ஆதார் பெற்றுக் கொண்டு பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.


என்னென்ன ஆவணங்கள் தேவை? 

என்னென்ன ஆவணங்கள் தேவை?

எப்படி அப்பளை செய்வது? நீங்கள் ஆன்லைன் அல்லது மொபைலில் இருந்தே கூட அப்ளை செய்து கொள்ளலாம். குடும்பத் தலைவர் யாரோ அவரின் போட்டோ 5 MP ஆக குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு யாரெல்லாம் புதியதாக ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டுமே அவர்களின் ரேஷன் கார்டு, சொந்த வீடாக இருந்தால் வீட்டு வரி ரசீது, வாடகை வீட்டில் இருந்தால், வாடகை ஒப்பந்தம் தேவை.


வாடகை ஒப்பந்த பத்திரம் 

வாடகை ஒப்பந்த பத்திரம்

இந்த வாடகை ஒப்பந்த பத்திரம் என்பது நெட் செண்டர்கள் அல்லது பத்திரம் எழுதும் அலுவலங்களில் கிடைக்கிறது. ஆக உங்களது விவரங்களை கொடுத்து, 20 ரூபாய் பத்திரத்தில் பிரிண்ட் செய்து கொள்ளலாம். இதில் வீட்டு உரிமையாளாரின் கையெப்பம், மற்றும் சாட்சி கையெழுத்து என போட வேண்டியிருக்கும்.


சரியான ஆவணங்களை கொடுங்க 

சரியான ஆவணங்களை கொடுங்க

உங்களுக்கு ஏற்கனவே கேஸ் இணைப்பு உள்ளது எனில் அதன் விவரங்களும் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி இல்லை எனில் அதனை கொடுக்க வேண்டியிருக்கும். மேற்கண்ட இந்த ஆவணங்கள் இருந்தாலே போதுமானது உங்களுக்கு ரேஷன் கார்டு 15 – 20 நாட்களில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பலரும் விண்ணப்பிக்கும் போது சரியான ஆவணங்களை கொடுக்காத பட்சத்தில், அது நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.


ஆன்லைனில் எப்படி? 

ஆன்லைனில் எப்படி?

சமீபத்தில் ரேஷன் அட்டை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள், ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும் என தமிழக ஆளுனர் சட்ட பேரவை உரையில் கூறியது குறிப்பிடத்தக்கது.


முதலில் என்ற இணையதளத்தினை ஒபன் செய்து கொள்ளுங்கள். அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்யவும். அது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு Name of family head என்ற பாக்ஸின் கீழ், ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.


போட்டோ எப்படி அப்லோடு செய்வது? 

போட்டோ எப்படி அப்லோடு செய்வது?

அதன் பிறகு மற்ற விவரங்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மெயில் ஐடி என பலவற்றையும் சரியாக கொடுக்கவும். அதோடு விண்ணப்பத்தில் குடும்ப தலைவருக்கான போட்டோ என்ற இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 5 எம்பி அளவில் இருக்க வேண்டும்.


என்ன வகையான அட்டை? 

என்ன வகையான அட்டை?

அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்யலாம். இது 1 எம்பி அளவில் இருக்க வேண்டும். இதற்காக கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில் உள்ளிட்ட பலவற்றையும் கொடுக்கலாம்.


எத்தனை உறுப்பினர்கள் சேர்க்கை 

எத்தனை உறுப்பினர்கள் சேர்க்கை

மேலாக உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும். அதில் முதலாவதாக குடும்ப தலைவர் பெயரை கொடுக்கவும். அதில் ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்கள் வரும். அதில் இல்லாதவற்றை தேர்வு செய்து கொடுக்கலாம். உதாரணத்திற்கு பிறந்த தேதி, ஆண் பெண், வருமானம், ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்கவும். கடைசியாக ஸ்கேன் செய்து ஆதாரினை அப்லோட் செய்ய வேண்டும். அப்லோட் செய்த பிறகு உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.


குழந்தைகள் பெயர் பதிவேற்றம் 

குழந்தைகள் பெயர் பதிவேற்றம்

இதனையடுத்து யாரை சேர்க்க வேண்டும். அவருடைய பெயர் என்ன? குடும்ப தலைவருக்கு என்ன உறவு? அதாவது மகன் மகள், மனைவி என்பதை கொடுக்க வேண்டும். அவருடைய விவரங்களை முழுமையாக பதிவிட்டு, ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தை எனில் பிறப்பு சான்று கொடுத்தால் போதுமானது. அதனையும் பதிவேற்றம் செய்து, உறுப்பினர் சேர்க்கை சேமி என்பதை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் திருத்தம் எனில் அதனை கிளிக் செய்தி திருத்தம் செய்து கொள்ளலாம்.


கேஸ் இணைப்பு விவரம் 

கேஸ் இணைப்பு விவரம்

அதன் பிறகு எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் என்பதன் கீழ், உங்களது கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயர் கொடுக்க வேண்டும். அதாவது கேஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளது, எத்தனை இணைப்பு உள்ளது என்பதையும் கொடுக்க வேண்டும். அதனை கொடுத்த பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியா என ஒரு முறைக்கு இரு முறை பார்த்து கொண்டு, உறுதிப்படுத்தல் என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.


பதிவிடுங்கள் 

பதிவிடுங்கள்

அதன் பிறகு உங்கள் விவரங்கள் சரியானதா என்பதை பார்த்து, பதிவு செய் என்பதை கொடுங்கள். நீங்கள் கொடுத்த விவரத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அது சிவப்பு நிறத்தில் காண்பிக்கும். ஆக அதனை சரியாக கொடுத்து பதிவு செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானவை எனில் உறுதிசெய் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.


எரிவாயு இணைப்பு பற்றிய முழு விவரங்கள்? 

எரிவாயு இணைப்பு பற்றிய முழு விவரங்கள்?

உங்களிடம் ஒரு இணைப்பு மட்டும் உள்ளது எனில் ஒன்றில் மட்டும் கொடுத்தால் போதும். இரண்டிலும் இருந்தால் இரண்டிலும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு எரிவாயு நிறுவனத்தின் பெயரை கொடுக்கவும் (HP, Bharat). ஒவ்வொன்றிலும் எத்தனை சிலிண்டர்கள் என கொடுக்கவும்.


குறிப்பு எண் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்? 

குறிப்பு எண் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்?

உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என வரும். அதில் குறிப்பு எண்ணும் வரும். அதனை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை வைத்து தான் உங்களது ரேஷன் கார்டு எந்த கட்டத்தில் உள்ளது என பார்க்க முடியும். இதனை கொடுத்த பிறகு உங்களது ஆதார் கார்டு, போட்டோ, விண்ணப்பம் உள்ளிட்டவற்றை தாலூகா அலுவலகத்தில் TSO-வில் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரைவில் உங்களது விண்ணப்பம் விரைவில் பரிசீலிக்கப்படும்.


விண்ணப்பத்தின் நிலை என்ன? 

விண்ணப்பத்தின் நிலை என்ன?

இதே இணையத்தில் முகப்பு பக்கத்தில் உங்களது விண்ணப்பத்தின் நிலையை பார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் விண்ணப்பித்த புறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். இதற்கு 1 – 2 மாதங்கள் ஆகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here