தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது உறுதி- அமைச்சர் அன்பில் மகேஷ் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது உறுதி- அமைச்சர் அன்பில் மகேஷ்

 திருச்சி: தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது உறுதி என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.திருச்சியில் இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக உள்ளது.பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் ஆலோசனைபடி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும் என்றார் அன்பில் மகேஷ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here