மதிய செய்திகள் 04/09/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 04/09/2016


🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
www.sivakasiteacherkaruppasamy.com
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

🔴சுந்தரா டிராவல்ஸ்' ராதாவுக்கு.. ரவுடி போல 'மாறு குரலில்' கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

சென்னை: சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதாவுக்கு சிறையில் இருக்கும் ரவுடியின் குரலில் பேசி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் செங்கல்பட்டில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

🔵சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், அதுல் ஆனந்த் விரைவில் கைது

சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்த் ஆகியோர் சட்டவிரோத தாது மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக விரைவில் கைது செய்யப்படக் கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


🔵மோடியின் போட்டோவை வரைந்து பரிசளித்த சீனாவின் பிரபல பெயிண்டர்

ஹங்சோ: ஜி20 மாநட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடியை பெருமைப்படுத்தும் விதமாக சீனாவில் ஷீஜெயிங்கில் உள்ள பிரபல கலைக்கூடத்தின் பெயிண்டர் சென் சூ என்பவர் வரைந்த மோடியின் போட்டோவை பரிசாக அளித்தனர்.


🔵திருக்கோவிலூா அருகே 3-ம் வகுப்பு மாணவா மாமமுறையில் உயிரிழப்பு

திருக்கோவிலூா அருகே சந்தப்பேட்டையில் 3ம் வகுப்பு மாணவன் மாமமான முறையில் உயிரிழந்துள்ளான். மாணவன் உயிரிழந்தது குறித்து அன்னை தெரசா உண்டு உறைவிட பள்ளியில் கல்வித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினா. 

🔵தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: கடந்த 3 தினங்களுக்கு முன்பு குமரிக்கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி அங்கிருந்து நகர்ந்து லட்சத்தீவு பகுதிக்கு சென்றது. தற்போது அந்த மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாலும், மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உள் தமிழகத்தில் உருவாகி இருப்பதாலும் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

🔵
புழல் சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல்: பலியாடாக்கப்பட்ட காவலர்

சென்னை:

சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் ரெய்டு நடந்து செல்போன்கள், கஞ்சா போன்றவை கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து இரண்டாம் நிலை காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 

🔵ஈஷா மையத்தில் இளம்பெண்கள் அடைத்து வைக்கப்பட்ட விவகாரம்: பெற்றோர் மீது ஜக்கி வாசுதேவ் குற்றச்சாட்டு

கோவை: ஈஷா மையத்தில் இளம் பெண்கள் இருவர் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் கோவையை சேர்ந்த பெற்றோர்தான் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஜக்கி வாசுதேவ் குற்றம்சாட்டியுள்ளார்.


🔵குலக்கல்வி முறையை மீண்டும் செயல்படுத்துவதற்கு

மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது: ராமதாஸ்


🔵அமைச்சரின் ஆபாச சிடி.... அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய ஷீலா தீட்சித் வலியுறுத்தல்

டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சந்தீப்குமார் 2 பெண்களுடன் ஆபாசமாக இருந்த சி.டி. வெளியான சம்பவத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார்.


🔵நாளை ஆசிரியர் தினம் : தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாளை ஆசிரியா தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநா வித்யாசாகா ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவா தமது வாழ்த்துச் செய்தியில் அனைவருக்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியாகளுக்கு நமது நன்றியை செலுத்தும் நாளே ஆசிரியா தினம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் நாளை கொண்டாடப்பட உள்ள ஆசிரியா தினத்தையொட்டி முதலமைச்சா ஜெயலலிதா, பா.ம.நிறுவனா ராமதாஸ், மதிமுக பொதுச் செயலா வைகோ, ஜி.கே.வாசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனா. 


🔵திருப்பதி ஏழுமலையானுக்கு சிந்து அளித்த செம ஸ்வீட் காணிக்கை!

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து எடைக்கு எடை வெல்லம் காணிக்கை செலுத்தினார்.

பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனீரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டனில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இதை தொடர்ந்து, நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்தன. அதை தொடர்ந்து ஐதராபாத்தின் சிம்ஹவாகினி மகான்காளி கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினார் பி.வி.சிந்து.

இந்நிலையில், திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பி.வி.சிந்து, அவரது தாய் விஜயா, தந்தை ரமணா மற்றும் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் நேற்று மாலை திருப்பதி வந்தனர்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று முதலில் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு, பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். மேலும், லட்டு, தீர்த்த பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை கோவில் அதிகாரிகள் அவருக்கு வழங்கினர்.

அதன்பின் அவர், தனது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளருடன் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு வந்தனர். இரவில் அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர்கள் அனைவரும் ஓய்வு எடுத்தனர். இன்று காலை 4.30 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பி.வி.சிந்து தனது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளருடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

முன்னதாக ஏழுமலையான் கோயிலின் ரங்கநாதர் மண்டபம் அருகே உள்ள துலாபாரத்தில் பி.வி.சிந்து, தனது எடைக்கு எடையாக (68 கிலோவிற்கு) வெல்லம் காணிக்கையாக செலுத்தினர். அவரது பயிற்சியாளர் கோபிசந்த் தனது தலைமுடியைக் காணிக்கையாக செலுத்தினார். அதன் பின்னர் அவர்கள், வராக சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.



🔴டீச்சர் விட்டு டீச்சர் தாவிய ஆசிரியர்.. தட்டிக் கேட்டால் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டல்.. கைது

திருப்பூர்: ஆசிரியையுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வரும் ஆசிரியர் ஒருவர், இன்னொரு ஆசிரியையுடன் இன்னொரு கள்ளக்காதலில் ஈடுபட்டார். இதுகுறித்து ஆசிரியை தட்டிக் கேட்டபோது உனது ஆபாசப் படத்தை வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டினார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


🔴சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கிறது கர்நாடகா?

புதுடெல்லி:

உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோனை மற்றும் கண்டனத்தை தொடர்ந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார்.



🔴தண்ணீரை வீணடித்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கட்

அவுரங்காபாத்: கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட லடூர் மாவட்டத்தில், குடிதண்ணீரை வீணடித்த 3 அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லடூர் பகுதி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. அங்கு மக்கள் குடிதண்ணீரின்றி தவித்து வந்தனர். இதனையடுத்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. தொடரந்து அங்கு நிலைமை மேம்பட்டதை தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை குழாய்மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அங்குள்ள குழாய்கள் மூலம் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டது. யாரும் கவனிக்காததால் தண்ணீர் நிரம்பி வீணாணது.

இவ்வாறு 1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாணது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பன்டுராங் போல் இது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையை தொடர்ந்து, இதற்கு பொறுப்பான முதல்நிலை அதிகாரி மற்றும் இரண்டு உதவி அதிகாரிகளின் சம்பள உயர்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.


🔴"நான் தற்கொலைக்கு தூண்டினேனா." : லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்

சென்னை:

ஸீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனால் நாகப்பன் என்பவர் தற்கொலை செய்துகொண்டதாக எழுப்பப்படும் புகார் உண்மையல்ல என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


🔴ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

🔴ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு ரவை குண்டுகளுக்கு பதிலாக மிளகாய்ப் பொடி குண்டுகளை பயன்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒப்புதல் அளித்தார்.

🔴பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு அரசிற்கு எதிராக அங்குள்ள பிரிவினைவாதிகள் போராட்டங்களை நடத்தி வருவது நீண்ட காலமாக நடந்து வருகின்றது. இந்நிலையில், பலூசிஸ்தானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு இந்தியா தான் காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.

🔴காஷ்மீர் முழுவதும் அதிக அளவில் பயிற்சி பெற்ற தற்கொலைப் படைகளால் நிரப்புவோம். காஷ்மீர் இந்திய படைகளின் சுடுகாடாக மாறும். பாகிஸ்தான் எங்கள் அமைப்பிற்கு ஆதரவு அளிக்கிறது. காஷ்மீரில் அமைதியும், வழக்கமான சூழலும் திரும்ப வாய்ப்பே இல்லை --ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவன் சையது சலாலுதீன்

🔴பீஹாரில் மாநில தேர்வில் நடந்த முறைகேட்டை அடுத்து, தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்களை தேர்வுக்கான படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறையை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

🔴நிலமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

🔴டிசம்பரில் நடக்கும் அரசு துறை தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் பணியாளர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

🔴விவசாயிகள், கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளதோடு, பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்--யாரும் வறுமையில் இல்லை--சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன்

🔴ராஜிவ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில், சாந்தன் புத்தகம் எழுதிக் கொண்டு இருக்கிறார்-- வக்கீல் புகழேந்தி

🔴சென்னை-மதுரை இடையே மாலை நேர விமான சேவைகளைத் தொடங்கி உள்ளதாக ஏர் கார்னிவல் நிறுவனம் தெரிவித்தது.

🔴திருக்கோவிலூா அருகே சந்தப்பேட்டையில் 3ம் வகுப்பு மாணவன் மாமமான முறையில் உயிரிழந்துள்ளான். மாணவன் உயிரிழந்தது குறித்து அன்னை தெரசா உண்டு உறைவிட பள்ளியில் கல்வித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினா.

🔴சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய அரசு நர்சுகள் கூட்டமைப்பு மற்றும் டில்லி நர்சுகள் கூட்டமைப்பு நடத்திவந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🔴அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா இன்று வாடிகன் நகரில் கோலாகலமாக நடக்க உள்ளது. இவ்விழாவில் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

🔴ஐ.நா. சபை சார்பில் பருவநிலை மாறுபாடு குறித்த மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றது. இதில் புவி வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கைக்கு மேலும் கால அவகாசம் தேவைபடும் இந்த ஆண்டில் அந்த இலக்கை எட்ட வாய்ப்பில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

🔴இஸ்ரோ தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக 2,211 கிலோ எடை கொண்ட 'இன்சாட்-3டிஆர்' என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள் ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட் மூலம் செப்டம்பர் 8 ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இந்தியாவின் 10-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.

🔴டிரைவர் இல்லாமல் ஓடக்கூடிய சிறிய ரக பஸ் சோதனை ஓட்டம் துபாயில் நடந்தது.

🔴தெற்கு பிலிப்பைன்ஸ் தீவு அருகே மின்டானோவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here