மக்கள் கவிஞர் இன்குலாப் மறைந்தார் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மக்கள் கவிஞர் இன்குலாப் மறைந்தார்

மக்கள் கவிஞர் "இன்குலாப்" மறைந்தார்!
அவரது "மனுசங்கடா நாங்க மனுசங்கடா"
மறையாது - நீடுடி வாழும் !! செவ்வணக்கம்!
***********************************************
பலநூறு முறை மக்கள் மத்தியில் நான் பாடிய அப் பாடலை நினைவு கூர்ந்து அஞ்சலி!
--------------------------------------------------------------------------

"மனுசங்கடா நாங்க மனுசங்கடா "

"மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா !

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா - அட
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா ?

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்?

குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது...?

சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க?

— டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here