ஆசிரியர் தகுதித்தேர்வு வெறும் கண்துடைப்பு தான்! ! கலங்கி நிற்கும் ஆசிரியர்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர் தகுதித்தேர்வு வெறும் கண்துடைப்பு தான்! ! கலங்கி நிற்கும் ஆசிரியர்கள்


ஒவ்வொரு ஆண்டும்பல்கலைக்கழக மானியகுழுவால் நடத்தப்படும்தேசிய தகுதித்தேர்வு,தமிழ்நாட்டில் மாநிலஅளவில் நடத்தப்படும்மாநில அளவிலான தகுதித்தேர்வு மற்றும்பள்ளிஆசிரியர்களுக்கானதகுதித்தேர்வுகள்போன்றவை வெறும்கண்துடைப்பாகத்தான்
நடத்தப்படுகின்றன.இந்தத் தேர்வுகளால்ஒரு பயனும் இல்லை' என்கிறார்கள்இத்தேர்வில்  தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புக்காகக்காத்திருப்பவர்கள்.என்ன. காரணம்?ஏராளமானோர் படித்துவேலை வாய்ப்புக்காகக்காத்திருக்கும்நிலையில்தகுதியானவர்களைத்தேர்ந்தெடுக்கத்தானேதேர்வு நடத்தப்படுகிறது.இதில் என்ன தவறுஇருக்கிறது, எதற்காகஎதிர்ப்புதெரிவிக்கிறார்கள்என்ற கேள்விகளோடுசந்தித்தோம்.
"எந்தவிதமானஅடிப்படை வசதியும்இல்லாமல் பெயர்அளவுக்குத்தான்பெரும்பாலான பி.எட்கல்லூரிகள் இயங்கிவருகின்றன.தமிழ்நாட்டில் வருடத்தில்60 ஆயிரம் பேர் பி.எட்.முடித்து வருகிறார்கள்.இதனை எல்லாம்கணக்கில்எடுத்துக்கொண்டு தான்ஆசிரியர்தகுதித்தேர்வினைகொண்டு வந்தார்கள்.ஆனால், அதிலும்சரியான நெறிமுறைகள்கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆசிரியர்காலியிடங்கள் அதிகம்உள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மைப்பள்ளிகளில் ஆசிரியர்தகுதித்தேர்வுஅடிப்படையில் ஆசிரியர்நிரப்புவதில் இருந்துவிலக்குபெற்றிருக்கிறார்கள்.இதனை எதிர்த்துதமிழக அரசு எந்தவிதஎதிர்ப்பையும்தெரிவிக்கவில்லை.சிறுபான்மையினர்பள்ளியில் தகுதியானஆசிரியர்கள்தேவையில்லைஎன்கிறார்களா? என்றுதெரியவில்லை.தற்போது அரசுஉதவிப்பெறும்சிறுபான்மையினத்தவர்நடத்தும் பள்ளிகளைத்தவிர இதர பள்ளிகளில்காலியிடங்கள் மிகவும்குறைவு என்கிறார்கள்.இந்த நிலையில் அடுத்தமாதம் நடைபெறவுள்ளதேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு எப்படிவேலை வாய்ப்பினைவழங்குவார்கள் என்றுதெரியவில்லை"என்கிறார் நெட்-ஸ்லெட்தேர்வுகளின் தேர்ச்சிபெற்றவர்களுக்கானஅமைப்பின்ஆலோசகருமானபேராசிரியருமானசுவாமிநாதன்.
காருண்யா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி 
 
வரும் பா. மோசேசெல்வகுமார் "ஏப்ரல்மாதம் இறுதியில் நடக்கஇருக்கிற தமிழ்நாடுஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆசிரியர்பயிற்சி முடித்த 2,72,000பேரும், பட்டப்படிப்புடன்பி.எட். முடித்தவர்கள்5,28,000 பேர் என எட்டுலட்சத்துக்குஅதிகமானோர்விண்ணப்பித்துஇருக்கிறார்கள்.ஆனால், இதுவரைஎவ்வளவு ஆசிரியர்கள்காலியிடம் இருக்கிறதுஎன்ற விவரங்கள்வெளியிடவில்லை.ஏற்கெனவேதகுதித்தேர்வில் வெற்றிபெற்று 35 ஆயிரம் பேர்மேல்காத்திருக்கிறார்கள்.அவர்களுக்கு உரியபதிலும் இல்லை.தற்போது நடைபெறஉள்ள தேர்வில்ஐம்பதாயிரம் பேருக்குமேல் தேர்ச்சிபெறும்போதுஅவர்களுக்கு எப்படிவேலைவாய்ப்பினைவழங்குவார்கள் என்றுதெரியவில்லை.
2011-ம் ஆண்டு நவம்பர்மாதம் தமிழக அரசுபிறப்பித்த 181-வதுஅரசாணையின்மூன்றாவது பிரிவில்‘அரசு உதவி பெறாததனியார் பள்ளிகளில்பணியாற்றும்ஆசிரியர்கள் அடுத்த 5ஆண்டுகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்’ எனக்குறிப்பிட்டு இருக்கிறது.ஆனால், தனியார்பள்ளிகளில்தகுதித்தேர்வைகணக்கில்எடுத்துக்கொள்ளாமல்சொற்ப சம்பளத்தில்அவர்களுக்குப்பிடித்தவர்களுக்கு பணிவழங்குகிறார்கள்.தனியார் பள்ளிகளில்தகுதித்தேர்வின்அடிப்படையில் பணிவழங்கப்பட்டிருந்தால்தமிழ்நாட்டில் ஆசிரியர்தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற 35,000 பேருக்கும்வேலைகிடைத்திருக்கும்.அடுத்தடுத்தஆண்டுகளின்தேர்வினை நடத்திஏராளமானவர்களுக்குவேலையும் வழங்கிஇருக்கலாம். ஆனால்நடக்கவில்லை.
பெரும்பாலான தனியார்பள்ளிகளில் அளவுக்குஅதிகமாகமாணவர்களிடமிருந்துகட்டணம்பெறுகிறார்கள்.ஆனால், சரியானசம்பளத்துடன்தகுதியான ஆசிரியர்கள்நியமிக்கப்படுவதில்லை. பெரும்பாலான பள்ளிமாணவர்களுக்குச்சரியாக எழுதப் படிக்கத்தெரிவதில்லை எனஆய்வுகள் கூறுகின்றன.ஒரு பக்கம் ஆசிரியர்பணியில் சேரக்கடுமையான போட்டியும்,இன்னொரு புறம்பள்ளியில் படிக்கும்குழந்தைகளுக்குச்சரியாக படிக்கத்தெரியவில்லை என்பதுநமது குழந்தைகளின்கல்வி முறையும், தரமும்கேள்விக்குறியாகவேஉள்ளது.
பள்ளிக் கல்வியில்இப்படி என்றால்கல்லூரிக் கல்வியில்இதைவிட மோசம்.பள்ளிகளில் ஆசிரியர்தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்என்கிறார்கள். ஆனால்,கல்லூரியில்பல்கலைக்கழகமானியக்குழு யூஜிசிநெட் தேர்விலும், மாநிலஅரசு நடத்தும் ஸ்லெட்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களைத்தான்ஆசிரியர் பணிக்குதேர்ந்தெடுக்கவேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும்தமிழக அரசு இதுவரைகண்டுகொள்ளவேஇல்லை. ஆனால்,வருடத்தில் இரண்டுமுறை யூஜிசி நெட்தேர்வும், வருடத்தில் ஒருமுறை மாநில அரசுதகுதித்தேர்வினைநடத்துகிறது.
தமிழ்நாட்டில் 2011-ம்ஆண்டு நடத்திய ஸ்லெட்தேர்வில் 1395 பேரும், 2012-ம் ஆண்டு 5495பேரும், 2016-ம் ஆண்டு8550 பேர் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள்.தேர்ச்சி பெற்றஅனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கிஇருந்தால்உயர்கல்வியில்காலியிடமே இருக்காது.ஆனால் வேறு அப்படிஎதுவும் நடக்கவில்லை.இந்தநிலையில் இந்தஆண்டும் ஸ்லெட் தேர்வுநடக்க இருக்கிறது. ஒருலட்சத்துக்குமேற்பட்டவர்கள் தேர்வுஎழுத விண்ணப்பித்துஇருக்கிறார்கள்.
இந்தத் தேர்வு எதற்காகநடத்தப்படுகிறது? இதன்நோக்கம் என்ன? தேர்ச்சிபெற்றவர்கள்எந்தளவுக்கு வாய்ப்புவழங்கப்படுகிறது?என்ற கேள்விகளுக்குஎல்லாம் பதிலேஇல்லை. ஒவ்வொருமுறையும் லட்சம்பேருக்கு மேல் தேர்வுஎழுதுவதன் மூலம்பெரும் தொகைகிடைக்கிறதுஎன்பதற்காகநடத்துகிறார்களா என்றுதெரியவில்லை.எல்லாம் ஒரு கண்துடைப்புக்காகவேதகுதித்தேர்வினைநடத்துகிறார்கள்.
பல்கலைக்கழகங்களில்உள்ளகாலியிடங்களுக்கு பலவித குளறுபடிகள்மூலமாகவும்,கல்லூரியில் உள்ளகாலியிடங்களுக்குதமிழ்நாடு ஆசிரியர்தேர்வாணையத்தின்மூலம் நிரப்புகிறார்கள். 2012-ம் ஆண்டு 2012ல்அறிவிக்கப்பட்ட அரசுமற்றும் அரசு உதவிபெறும் கலை,அறிவியல்கல்லூரிகளில் 3120உதவி பேராசிரியர்பணியிடங்களில்காலியாக உள்ளதாகஅறிவித்தார்கள்.ஆனால், இதுவரைநிரப்பப்படவில்லை.கடந்த ஒராண்டுக்கும்மேலாக ஐந்துபல்கலைக்கழகங்களில்துணைவேந்தர்கள்இல்லாமல்இருக்கிறார்கள்.துணைவேந்தர்இல்லாததால் பலரும்படித்த படிப்புக்கானபட்டத்தையே பெறமுடியாமல்இருக்கிறார்கள். இப்படிஇருக்கும்போது கல்வித்தரத்தை பற்றி என்னசெல்வது என்றுதெரியவில்லை" என்றுமுடித்தார் .
நெட்-ஸ்லெட்அசோசியேசன்அமைப்பின் செயலாளர்ஏ.ஆர். நாகராஜன்  "
ஒவ்வொரு ஆண்டும்எவ்வளவு பேர் நேர்முகத்தேர்வுக்கு என்னதகுதியோடுவருகிறார்கள் என்றதகவலில்அடிப்படையிலேயேஸ்லெட் தேர்வுநடத்துவதற்கு அனுமதிவழங்கப்பட வேண்டும்.ஆனால், இங்கு தேர்ச்சிபெற்றவர்கள்ஏராளமானவர்கள்இருந்தும் திரும்பத்திரும்பநடத்துகிறார்கள். இதில்முடிவினைஅறிவிக்கும்போதுபல்கலைக்கழகமானியக்குழுவிதிமுறையினையும்கடைப்பிடிப்பதில்லை.ஆசிரியர்களைநியமிக்கும்போதுதகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றதையும்கண்டுகொள்வதில்லை.எந்த விதிமுறையும்கடைபிடிப்பதில்லை.இதனை நீதிமன்றத்தின்கவனத்துக்குஎடுத்துச்சென்றாலும்,நீதிமன்றத்தின்அறிவுறுத்தலுக்குவருவதற்கு முன்பாகதகுதியில்லாதவர்கள்நியமித்துவிடுகிறார்கள். இந்தநிலையில் கல்வித்தகுதியினை எங்குப்போய் தேடுவது என்றுதெரியவில்லை"என்கிறார்.
தகுதித்தேர்வில் இவ்வளவு குளறுபடிகள் இருப்பதைப் பார்க்கும்போது திகைப்பாய் இருக்கிறது.அரசு மாற்றத்தைஏற்படுத்துமா அல்லது குளறுபடிகளின் ஒட்டுமொத்த  உருவமாகமாறுமா  என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி - விகடன்
 தமிழ் இணைய செய்திகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here