- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad


   தமிழ் இணைய செய்திகள்

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*_✴டெல்லி மக்களவையில் சி-ஜிஎஸ்டி மசோதா திருத்தங்களுடன் நிறைவேற்றம்_*

டெல்லி: டெல்லி மக்களவையில் சி-ஜிஎஸ்டி மசோதா திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக 4 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

*_✴நெல்லையில் மின்னல் தாக்கி 2 பேர் பலி_*

நெல்லை: நெல்லையில்  மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் பிராஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி கோமு மற்றும் கோபாலசமுத்திரத்தில் மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

✴தேர்வு முடிந்த உற்சாகம்_*

எஸ்எஸ்எல்சி தேர்வு சிறப்பு பாடத்தேர்வுடன் வரும் 30ம் தேதி முடிவடைகிறது. நேற்று சமூக அறிவியல் தேர்வு. முக்கிய பாடத் தேர்வுகள் முடிந்துவிட்டதால், பெரும்பாலான மாணவர்களுக்குத் தேர்வுகள் முடிந்துவிட்டன. தேர்வுகள் எழுதி முடித்த மாணவ, மாணவியர்கள் தேர்வு அறையை விட்டு வெளியே வந்ததும் உற்சாகமாக கொண்டாடினர். ‘இங்க்’ தெளித்தும், காகிதங்களை கிழித்து தூக்கி வீசியெறிந்தும் கொண்டாடினர். 

ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து நெகிழ்ச்சியுடன் பிரிந்து சென்றனர். பிளஸ்2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி துவங்கியது. 31ம் தேதியுடன் முடிகிறது.

*_✴புதுச்சேரியில் நாளை லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை_*

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்று சரக்கு லாரி உரிமையாளர்கள், முகவர்கள், மினி லாரி ஏஜெண்டுகள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை வாகனங்களை இயக்க பாதுகாப்பு அளிக்கக்கோரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

*_✴ஐ.பி.எல். தொடரில் இருந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி விலகல்?_*

மும்பை: ஐ.பி.எல். தொடரில் இருந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி விலகல்?. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் குணமடைய கோலி ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

*_✴ஜீயபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி_*

திருச்சி: திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜேந்திரன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

*_✴✴கொல்லிமலை பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் கண்டெடுப்பு_*

கொல்லிமலை : நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் 10 நாட்டு துப்பாக்கிகள் கண்டெடுக்கபட்டுள்ளன. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

*_✴அசாம் மாநிலத்தில் எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து 2 பேர் பலி_*

நாகோன்: அசாம் மாநிலம் நாகோன் மாட்டத்தில் எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில்  2 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெகலபந்தா என்ற கிராமத்தில் மரம் தாக்கியதால் எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளது. 

*_✴விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் விடுவிப்பு_*

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மெரினாவில் கைதான மாணவர்கள் மயிலாப்பூர் சமுதாய நலக்கூட்டத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

*_✴இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி: 2 வது சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேற்றம்_*

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் 2 -வது சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறினார். முதல் சுற்றில் சகவீராங்கனை அருந்ததியை 21-17, 21-06 என்ற நேர்செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர். 
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here