பூமியை கண்காணிக்க கார்டோசாட் 2 இ ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பூமியை கண்காணிக்க கார்டோசாட் 2 இ ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

*🌐➡பூமியைக் கண்காணிக்கும் கார்ட்டோசாட்- 2இ ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.. கவுண்ட்டவுன் தொடங்கியது.*

➡இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

➡பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.

➡அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. தற்போது 712 கிலோ எடை கொண்ட 7–வது கார்ட்டோசாட்–2இ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தமிழ் இணைய செய்திகள்
┈┉┅━❣••☘🌸☘••❣━┅┉┈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here