பாடத்திட்டமாற்றம் பதிவு செய்ய ஜூலை 2 வரை கால அவகாசம் நீட்டிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பாடத்திட்டமாற்றம் பதிவு செய்ய ஜூலை 2 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பாடத்திட்ட மாற்றம் குறித்த பணிக்குப் பதிவு செய்ய ஜூலை 2 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் வகையிலும், பிளஸ் 1 வகுப்பில் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இப்பணிகளை அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கு பெற ஆர்வமுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நிறுவனத்தின் இணையதள முகவரியான ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ் -இல் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ஊர்ழ் தங்ள்ர்ன்ழ்ஸ்ரீங் டங்ழ்ள்ர்ய் ஊர்ழ் பங்ஷ்ற் ஆர்ர்ந் ரழ்ண்ற்ண்ய்ஞ் என்ற படிவத்தில் தங்களது விவரங்களை வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தற்போது இந்தப் பதிவுக்கான காலம் ஜூலை 2 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here