வயிற்றுக்கோளாறு முதல் எலும்பு நோய் வரை மருந்தாகும் பேரீச்சம்பழம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வயிற்றுக்கோளாறு முதல் எலும்பு நோய் வரை மருந்தாகும் பேரீச்சம்பழம்

`நாள் ஒன்றுக்கு மூன்று பேரீச்சம்பழங்களாவது சாப்பிட வேண்டும்’ என்று சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். காரணம், அந்த மூன்று பேரீச்சையே நமக்கு அதிக ஆற்றலைத் தரக்கூடியது. பேரீச்சம்பழம் ரத்தசோகையைப் போக்குவதற்கும், முடி உதிர்வைத் தடுப்பதற்கும் உதவக்கூடியது. அதோடு, ஏராளமான பலன்களையும் அளிக்கக்கூடியது. ரம்ஜான் நோம்பின்போது, நாள் முழுவதும் சாப்பிடாமல் மாலை வேளையில் இரண்டு பேரீச்சம்பழத்தை முதலில் சாப்பிட்டுவிட்டு, பிறகு விரதத்தை முடிப்பார்கள். ஏன் தெரியுமா? வெறும் வயிற்றில் அதிகச் சத்துள்ள இதைச் சாப்பிடுவதால், நம் உடல் எந்தவிதத் தடையுமின்றி அனைத்துச் சத்துக்களையும் முழுவதுமாக கிரகித்துக்கொள்ளும். அத்துடன் அதிக அளவு உணவை சாப்பிட வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்தாமல், ஒரு நிறைவுத்தன்மையைத் தந்துவிடும்.

இதில், கால்சியம், சல்ஃபர், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு உறுதி அளிக்கக்கூடிய  ரிபோஃப்ளாவின், நியாசின், ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற அனைத்துச் சத்துக்களும்கொண்ட ஒரே பழம் பேரீச்சம்பழம்தான். சரி... இனி நாம் பேரீச்சம்பழம் உடலுக்கு என்னென்னப் பலன்களைத் தருகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பேரீச்சம்பழம்

* `பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படும்’ என்கிற பொதுவான கருத்து ஒன்று உண்டு. அது உண்மை அல்ல. மலமிளக்கி உணவுகளில் ஒன்றாக இதனைச் சேர்த்துள்ளனர் நம் முன்னோர். மலச்சிக்கலைப் போக்க, முதல் நாள் இரவு மூன்று பேரீச்சம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். காலையில் இந்தப் பேரீச்சம்பழச் சாற்றைப் பருகலாம். கரையக்கூடிய நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளதால், குடல் இயக்கங்கள் ஆரோக்கியமாக இருக்கும்; மலச்சிக்கலும் நீங்கும்.

* செலினியம், மாங்கனீஸ், தாமிரம், மற்றும் மக்னீசியம் போன்றவை பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ளதால், எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும்  துணைபுரியும். அத்துடன் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கும். குறிப்பாக, எலும்பு தேய்மானத்தால் பெரிதும் அவதிப்படும் வயதானவர்கள் இதைச் சாப்பிடுவது நல்லது.

* பேரீச்சம்பழத்தில் இருக்கும் நிகோட்டின் அளவு குடலில் இருக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, குடல் கோளாறுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். இதில் அமினோ அமிலம், கரையாத மற்றும் கரையக்கூடிய நார்சத்து நிறைந்துள்ளதால் செரிமானக் கோளாறுகளைச் சீராக்குகும்.

* இது, இரும்புச்சத்து குறைபாட்டைச் சரிசெய்ய சிறந்த சாய்ஸ். தாதுக்களின் அளவு அதிகமாக இதில் உள்ளடங்கியிருப்பதால், நம் உடல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் துணைபுரியும். சோர்வு மற்றும் மந்தத்தன்மையைச் சரி செய்யும்; உடல் ஆற்றல் மற்றும் வலிமையை அதிகரிக்கச் செய்யும்.

பேரீச்சம்பழம்!

* பெரும்பாலான உணவுகளில் இல்லாத மகத்துவம் பேரீச்சம்பழத்தில் இருக்கிறது. கரிம சல்ஃபர். இது, உடலில் ஏற்படும் அல்ர்ஜிகள் மற்றும் பருவகால ஒவ்வாமைகளுக்குச் சிறந்த தீர்வு தரக்கூடியது.

* ஒரு கிலோ பேரீச்சம்பழத்தில் 3,000 கலோரிகள் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்ல, ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் பேரீச்சம்பழமே தந்துவிடும். எடை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் 6 பேரீச்சம்பழம் வரை சாப்பிடலாம். உடல் எடையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் பேரீச்சம்பழத்துடன் வெள்ளரிக்காயையும் சேர்த்துச் சாப்பிடலாம்.

*  குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கைச் சர்க்கரைகள் இதில் அதிகமாக உள்ளதால் ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம். அதனால் உடலுக்குத் தேவையான ஆற்றல் உடனடியாக கிடைக்கும்.

* இதிலுள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்வதால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களுக்குச் சிறந்த நிவாரணம் தரும்.

* இரவில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை காலையில் சாப்பிடுவதால், பலவீனமான இதயத்துக்கு நல்ல பலம் கிடைக்கும்.  இதிலிருக்கும் பொட்டாசியம், இதயம் தொடர்பான பிரச்னைகளின் வீரியத்தைக் குறைக்கும். கெட்ட கொழுப்பினாலும் இதயம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. கெட்ட கொழுப்பைக் குறைக்க ஆரோக்கியமான  மற்றும் சுவையான ஒரே வழி பேரீச்சம்பழம்தான்.

* பேரீச்சம்பழம் காது, மூக்கு, தொண்டை பிரச்னைகளைக் குணப்படுத்த பெரிதும் உதவும். தொடர்ந்து இதைச் சாப்பிட்டு வந்தால், மாலைக்கண் நோயையும்  குணப்படுத்த முடியும்.

* `பேரீச்சம்பழம் வயிற்று புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது’ என்பது சில ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.
இத்தனை நன்மைகளை அள்ளித்தரக்கூடிய பேரீச்சம்பழத்தை தரமானதாகப் பார்த்து வாங்கி, சாப்பிட வேண்டும். உண்பதற்கு முன்னர் நன்கு கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். மொத்தத்தில் இது நம் ஆரோக்கியத்துக்கு உதவும் அதிசயம்!

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here