வீட்டுப்பாடம்: மாணவியின் கையை உடைத்த ஆசிரியை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வீட்டுப்பாடம்: மாணவியின் கையை உடைத்த ஆசிரியை


ஆந்திராவில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர், வீட்டுப்பாடம் செய்யாமல் வந்ததற்காக யூகேஜி படிக்கும் மாணவியின் கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேஷனல் டேலன்ட் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பூஜா பல்லவி என்ற மாணவி, யூகேஜி படித்து வருகிறார். இவர் புதன்கிழமை (அக்டோபர் 25) வீட்டுப்பாடம் செய்யாமல் வந்துள்ளார். அதனால், கோபமடைந்த ஆசிரியை மாணவியை அடித்துள்ளார்.

கையில் வீக்கத்துடனும், வலியுடனும் வீட்டுக்குச் சென்ற மாணவியைப் பெற்றோர் விசாரித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவரிடம் மாணவியை அழைத்துச் சென்று ஸ்கேன் செய்தபோது அவரது கை உடைந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியைமீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here