ஹெல்மெட்: நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தும் 5 வயது சிறுமி! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஹெல்மெட்: நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தும் 5 வயது சிறுமி!

ஹெல்மெட்: நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறுமி!


பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து நூதன பிரச்சாரத்தில் ஒரு வருடமாக ஈடுபட்டு வருகிறார்.


நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சாமுவேல்ராஜ் - ராதா தம்பதியரின் ஐந்து வயது மகள் லக்சன்யாராஜ். இவர் முன்னீர்பள்ளத்திலுள்ள முத்தமிழ் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். சிறுமி லக்சன்யாராஜ் கடந்த ஓர் ஆண்டாகப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். அத்துடன் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்குப் பரிசும் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ( ஆகஸ்ட் 25) பாளையங்கோட்டையில் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாணவி லக்சன்யாராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் ராமையா, லக்சன்யாராஜைப் பாராட்டி அவருக்குப் பரிசும் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here