சிபிஎஸ்இ: டிஜிட்டல் முறையில் கேள்வித்தாள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிபிஎஸ்இ: டிஜிட்டல் முறையில் கேள்வித்தாள்!



சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாகாமல் இருப்பதைத் தடுக்க, டிஜிட்டல் முறையைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிபிஎஸ்இ தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாகச் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தேர்வு கேள்வித்தாள் முறைகேடாக வெளியாவதைத் தடுக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்திய மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு கேள்வித்தாள்களை டிஜிட்டல் என்கிரிப்ட் முறையில் உருவாக்கியுள்ளது. இந்த வகை கேள்வித்தாள்கள் அனைத்தும் கணினி வழியாகவே வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கேள்வித்தாள்களை அனுப்புவது சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தாண்டு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கம்பார்ட்மெண்ட் தேர்வின் (திரும்ப எழுதுதல்) போது, 487 தேர்வு மையங்களில் டிஜிட்டல் கேள்வித்தாள்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தேர்வை 4 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். டிஜிட்டல் கேள்வித்தாள் முறை நல்ல பயனைத் தந்துள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த முறையில், தேர்வுகள் தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகக் கேள்வித்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டன. ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் தனியாக அடையாளக் குறியீடு கொடுக்கப்பட்டது. அதேபோல ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஒரு அடையாள எண் ஒதுக்கப்பட்டது. இதனை மீறி, கேள்வித்தாள் முறைகேடாக வெளியானால் எந்தத் தேர்வு மையத்திலிருந்து வெளியானது என்பது உடனடியாகத் தெரிந்துவிடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here