12-வது தேர்ச்சியா? மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

12-வது தேர்ச்சியா? மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு




மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
கள உதவியாளர் - 01
இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - 02

கல்வித் தகுதி:
கள உதவியாளர் - 12-வது தேர்ச்சி
இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு :
கள உதவியாளர் - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :
கள உதவியாளர் - ரூ.16,182
இளநிலை ஆராய்ச்சி அலுவலர் - ரூ. 31,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iari.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 05.10.2019 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.



நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Division of Genetics IARI Pusa Campus\, New Delhi - 110012.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iari.res.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்

Subscribe Here