திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா





திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 30- ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.
ஆண்டு தோறும் நடைபெறும் அந்த விழாவை ஒட்டி 29- ஆம் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. 30-ந்தேதி மாலை 5.23 மணியில் இருந்து 6 மணிவரை மீன லக்னத்தில் கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.
அக்டோபர் மாதம் 1-ந்தேதி காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா நடைபெறுகிறது. 2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, உள்பட 7 ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் வீதியுலாக்கள் நடைபெறுகின்றன. 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானமும், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.
வீதி உலா நிகழ்ச்சிகளின் போது, உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடனும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

Subscribe Here