தமிழ்நாடு வன சீருடை பணிக்கு தேர்வானவர்களுக்கு தமிழக அரசு நியமன ஆணை.! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ்நாடு வன சீருடை பணிக்கு தேர்வானவர்களுக்கு தமிழக அரசு நியமன ஆணை.!




தமிழ்நாடு வன சீருடை பணிக்கு தேர்வானவர்களுக்கு தமிழக அரசு நியமன ஆணை.!
தமிழ்நாடு வன சீருடை பணிக்கான தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் நடத்தப்பட்டது. இதில் 168 பெண்கள் உள்பட 552 வனக்காப்பாளர் 45 ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து வனக்காப்பாளர்களுக்கான பயிற்சி கோவையில் உள்ள வன உயர் பயிற்சியகம் சார்பில் கடந்த மார்ச் 25″ஆம் தேதி முதல் தொடங்கி ஆறு மாதம் நடைபெற்றது.
இதில் தீ தடுப்பு, மனித விலங்குகள் மோதல் தடுப்பு, நீர் மேலாண்மை, கவாத்து, யோகா, வாகனம் ஓட்டுதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் இவர்களுக்கு 9″ பாடப்பிரிவுகளில் எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வுகள் நடத்தப்பட்டன.

75 ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்ட இந்த பயிற்சிகள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள புலிகள் காப்பகம், வன ஆராய்ச்சி நிலையங்கள் சதுப்பு நில காடுகள் என வனப்பகுதிகளில் 15 நாட்கள் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில் 552 பேர் கலந்து கொண்டனர். இதில் இரண்டு பேர் பயிற்சியின்போது வேறு பணியில் சேர்ந்து விட்டனர். இந்நிலையில் பயிற்சி முடித்த 550 வனக்காப்பாளர்களுக்கும் 45 ஓட்டுநர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் விழா கோவை தமிழ்நாடு வன உயர் பயிற்சி அகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எஸ் பி வேலுமணி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் துரைராசு, மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் எம்பி எம்எல்ஏக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Subscribe Here