'ஆதார்' போல், பள்ளி மாணவர்களுக்கென தனித்துவ அடையாள அட்டை, 'அபார்' எனும் பெயரில், விரைவில் வர உள்ளது.
மக்களுக்கு 'ஆதார்' அட்டை வழங்குவது போல், நாடு முழுதும் பள்ளி மாணவ -- மாணவியருக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த அட்டைக்கு, 'தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு' அதாவது 'அபார்' என, பெயரிடப்பட உள்ளது.
இதில், மாணவரின் முழுமையாக கல்வி விபரம், கூடுதல் திறமைகள் பதிவு செய்யப்பட உள்ளன.
'அபார்' அட்டையின் அடிப்படை தகவல்கள் அவர்களின் 'ஆதார்' தகவல்களில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் கருத்து கேட்புக்கு பிறகே, இதற்கு ஒப்புதல் வழங்கப்படும். இதுகுறித்து, விரிவான அறிவிப்புகள் அடுத்தாண்டு துவக்கத்தில் வெளிவர உள்ளது' என்றனர்.
Post Top Ad

About Numaralogy
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
Newer Article
ஆசிரியர் ஒற்றர்கள் ; கல்வித்துறையில் அலறும் சங்கங்கள் ' நெருக்கடி டெக்னிக் '
Older Article
10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக