சமீபத்தில் நடத்த இருந்த போராட்டம் கடைசி நேரத்தில் விளக்க கூட்டமாக மாற்றி பிசுபிசுக்க வைக்கப்பட்ட பின்னணியில் இந்த 'ஆசிரிய ஒற்றர்கள்' பங்கு அதிகம் இருந்தன. மேலும் 20 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் சங்கம் ஒன்றின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஒற்றர்கள் மூலம் வலை விரித்து சங்கத்தை உடைக்கும் முயற்சியும் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நிர்வாகிகள் கூறியதாவது: அரசு அளித்த வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்ற கோரி போராடுகிறோம். ஆனால் எங்கள் கைகளை வைத்தே எங்கள் கண்களை குத்தி பலவீனப்படுத்தும் கல்வித்துறையின் இந்த 'நெருக்கடி டெக்னிக்' அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியர்களை கற்பிக்கும் பணிக்கு தயார்படுத்தாமல் இப்படி ஒற்றர் வேலை பார்க்க ஊக்கப்படுத்துவது தவறான செயல். அவர்கள் அமைச்சர், உயர் அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி மாவட்ட அதிகாரிகளை மிரட்டி இத்துறையை தான் பலவீனப்படுத்துகின்றனர் என்றனர்.
TEACHERS NEWS |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக