ஓவியாவுக்குப் பெருகும் ஆதரவு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஓவியாவுக்குப் பெருகும் ஆதரவு!

!

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஒருவர் இவ்வளவு ரசிகர்களைப் பெற முடியுமா என்று ஆச்சர்யப்படவைக்கும் அளவுக்கு தமிழ் மக்களின் குடும்பத்தில் ஒருவராக மாறியிருக்கிறார் ‘பிக் பாஸ்’ ஓவியா. அவரது அணுகுமுறைகள் பலருக்கும் பிடித்துப் போக சமூக வலைதளங்களில் ஓவியா புரட்சி படை, ஓவியா ஆர்மி என பல பக்கங்கள் தொடங்கப்பட்டு அவரைப் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், எழுத்தாளர்கள்கூட ஓவியாவின் ரசிகர்களாகிவிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஓவியாவே வருவார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது அவரது ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது. ஆனால், மீண்டும் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று வரும் தகவல்களால் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இப்போதும்கூட அவருக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே தான் உள்ளனர்.

திரைத்துறையில் உள்ள நடிக, நடிகையர்கள், இயக்குநர்கள் பலரும் ஏற்கெனவே அவருக்கு ஆதரவாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், இப்போது நடிகை சுனைனாவும் நடிகர் கிருஷ்ணாவும் முதன்முறையாக ஓவியாவைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். ஓவியாவோடு இணைந்து ‘யாமிருக்க பயமே’ படத்தில் நடித்திருந்த கிருஷ்ணா, “இதுதான் பிக் பாஸைப் பற்றிய எனது முதல் டிவிட். ஓவியா ஒரு ஹீரோ போல் வெளியே வருகிறார். ஒவ்வொருவரின் அன்பையும் பெற்றுள்ள அவரை நினைத்துப் பெருமை கொள்கிறேன். அன்பான கண்ணே, நீ மாஸ் மச்சான்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை சுனைனா, “ஓவியாவுக்காக மனம் திறக்கிறேன். நல்ல மனம் படைத்த நேர்மையான மனுஷி அவர். அவரது நல்ல மனதுக்கு வாழ்த்துகள். அவர் அன்புக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here