- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

**பேரன்பு மிக்க 7-வது ஊதியக்குழு பெற்றுத்தந்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி   (TNPTF) உறுப்பினர்களே* !

CPS நீக்கம், ஊதிய முரண்பாடு களைதல் மற்றும் 21 மாத நிலுவைத்தொகை வழங்க கோறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்திவிட்டு, உச்சகட்டமாக JACTO- GEO சார்பில் தலைமைச்செயலக முற்றுகைப் போராட்டம் மே-8 இல் நடைத்த உள்ளோம்.
இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வென்றெடுக்க இருக்கிறோம்.

நடைபெற்ற அத்துனை போராட்டங்களிலும் பங்கேற்று சாதனை படைத்தவர்கள் நாம்!

அந்த பெருமையைக் தொடர்ந்து காக்கும் பொருட்டு வரும் மே-8 போராட்டத்திலும் நாம் பெருவாரியாகப் பங்கேற்றிட வேண்டும்.

நீங்கள் அனைவரும் ! வட்டார பொறுப்பாளர்கள் எடுத்த முடிவினை ஏற்றுகொள்வீர்கள் என்ற அடிப்படையில் வெயில் காலம் என்பதால் AC semi-sleeper பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மே-6 ஆம் தேதி இரவு சிவகாசியிலிருந்து புறப்பட்டு மே-7 காலை ஏற்காடு பகுதியை கண்டுகளிப்பது, பின்னர் ஏற்காட்டிலிருந்து இரவு புறப்பட்டு மதுராந்தகம் தங்கல்.

மே-8 காலை மதுராந்தகத்திலிருந்து புறப்பட்டு சென்னையில் நடைபெறும் முற்றுகையில் கலந்துகொண்டு இரவு சென்னையில் புறப்பட்டு மே-9 காலை சிவகாசி வந்தடைவது என திட்டமிடபட்டுள்ளது.

நமது உறுப்பினர்கள் அத்துனை பேரும் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

நமது வட்டாரப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு உங்களது பெயர்களைப் பதிவு செய்திட அன்புடன் வேண்டுகிறோம்.

நாம் பெற்ற  அத்துனை உரிமைகளையும் நமது சந்ததியினரும் பெறவேண்டுமானால் போராடித்தான் பெறவேண்டும்.

ஆசிரியர்நலனுக்காக என்றென்றும்  பாடுபடும் ஒரே இயக்கம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி
ஆசிரியர் கூட்டணி
TNPTF
  சிவகாசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here