வெஜிடபுள் புலாவ் செய்முறையும் மருத்துவ குணங்களும் -நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வெஜிடபுள் புலாவ் செய்முறையும் மருத்துவ குணங்களும் -நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


கேரட்பாஸ்மதி அரிசிபச்சை பட்டாணி

தேவையானப் பொருள்கள்:

பாஸ்மதி அரிசி – 2 கப்பெரிய வெங்காயம் – 2கேரட் -2பச்சை பட்டாணி – 100 கிராம்பீன்ஸ் – 50 கிராம்காலிஃப்ளவர்- 100 கிராம்பச்சை மிளகாய் – 2இஞ்சி பேஸ்ட் – 2 டீஸ்பூன்பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்சீரகம்-அரைத் தேக்கரண்டிமல்லிபுதினா தழை – சிறிதளவுபட்டை – ஒரு அங்குலம்கிராம்பு – 2ஏலக்காய் – 2பிரியாணி இலை – சிறிதளவுஎண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.வெங்காயத்தை நீளாமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.கேரட் மற்றும் பீன்சை அரைத் துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வெந்நீரில் அலசி வைக்க வேண்டும்.பட்டை கிராம்பு ஏலக்காய் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பிரிஞ்சி இலை போட்டு தாளிக்க வேண்டும்.பின்பு அதனுடன் நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதனுடன் இஞ்சி பூண்டு மற்றும்  அரைத்த மசாலா சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.இறுதியாக அதில் தேவையான காய்கறிகள் அனைத்தும் சேர்த்து  மிதமாக கிண்ட வேண்டும்.பின்பு ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து நான்கு கப் நீர் ஊற்றி கொதிக்கும் வரை மூடி வைக்க வேண்டும்.கொதித்ததும் உப்பு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.பத்து நிமிடம் கழித்ததும் மூடியை திறந்து சாதத்தை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.தேசியக்கொடியைப் போல் அலங்கரிக்க வேண்டுமென்றால் சாதத்தின் இரு ஓரங்களிலும் அதாவது ஒரு பக்கம் பச்சை நிறத்தில் இருக்கும் பீன்ஸ், பட்டாணி, மல்லி மற்றும் புதினா இலைகளையும்மற்றொரு பக்கத்தில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் கேரட்டையும், நடுவில் சாதத்தையும் வைத்துப் பார்த்தால் நம் நாட்டு தேசியக் கொடிப்போல் காட்சியளிக்கும் அழகைப் பார்த்து ருசித்து சாப்பிடலாம்.

மருத்துவக் குணங்கள்:

காய்கறிகளில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் அடங்கியுள்ளன.காய்கறிகள் நம் ‌உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.நம் உடல் வலிமையைக் கூட்டுகிறது.காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதால் ஆபத்தான நோய்களான இதயம் சம்பந்தமான நோய்கள், அதிக ரத்த அழுத்தம் மற்றும் புற்று நோய் ஆகிய நோய்களில் இருந்து காய்கறிகள் நம்மைப் பாதுகாக்கிறது.காய்கறியில் வைட்டமின்கள்,உயிர்சத்துகள், நார்ச்சத்துகள், கால்சியம், அயன் மற்றும் ஜிங் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.இத்தகைய சத்துகள் மற்றும் நன்மைகள் நிறைந்த காய்கறிகளை நாம் அனைவரும் விரும்பி உண்போம்.

”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உணர்ந்து
நோயின்றி வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here