முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் மாணவர்கள் பேரணி! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் மாணவர்கள் பேரணி!


முள்ளிவாய்க்கால் படுகொலை தினமான இன்றைய (மே 18) தினத்தின் நூற்றுக்கும் மேற்ப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருசக்கர வாகனங்களிலும் ஒலிபெருக்கி வாகனங்களுடனும் முள்ளிவாய்க்காலை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நினைவுகூரும் வகையில் இன்றைய தினத்தை துக்க நாளாகவும்,தமிழினப்படுகொலை நாளாகவும் வடமாகாண சபை அறிவித்துள்ளது .

9ஆம் ஆண்டு தமிழினப் படுகொலை நாளை அனுஷ்டிப்பதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாகச் சென்று காலை 11 மணிக்கு நினைவுச் சுடரை ஏற்றினர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வடமாகாண சபைக்கும் நீண்ட காலமாக ஒருங்கிணைந்து இயங்குவதில் முரண்பாடுகள் இருந்துவந்தன. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனைவரையும் ஒருங்கிணைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுசரித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here