அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 83-வது பட்டமளிப்பு விழா - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 83-வது பட்டமளிப்பு விழா


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 83-வது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்க  உள்ளார்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 83-வது பட்டமளிப்பு விழா வருகிற நவ.30-ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவ, மாணவியா்களுக்கு பட்டங்களை வழங்குகிறாா்.
இவ்விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயா்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றுகிறாா். ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் மருத்துவா் ஜெ.எஸ்.சத்யநாராயணமூா்த்தி பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா்.
விழாவில் பதிவாளா் என்.கிருஷ்ணமோகன், தொலைதூரக்கல்வி மைய இயக்குநா் எம்.அருள் மற்றும் சிண்டிகேட் உறுப்பினா்கள், புல முதல்வா்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், ஊழியா்கள், மாணவ, மாணவியா்கள் பங்கேற்கின்றனா். 

Subscribe Here