போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக அரசு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக அரசு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை : போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக அரசு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவர்களின் பணிமாறுதலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது,அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உரிமையில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் 5 நாட்கள் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது . தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Subscribe Here