47 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

47 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை


கடலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 64
Assistant In Cooperative Institutions In Cuddalore District (Other Than Cuddalore District Central Cooperative Bank)
பணி: Assistant – 20
Assistant In Cuddalore District Central Cooperative Bank
பணி:  Assistant – 44
தகுதி: ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 
சம்பளம்: ரூ.14,000 – ரூ.47,500 
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்டி, அனைத்து பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.cuddrb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய எனும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2020 

Subscribe Here