இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் வைரஸ் பரவல் வெடிக்கலாம் -who எச்சரிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் வைரஸ் பரவல் வெடிக்கலாம் -who எச்சரிக்கை

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் 2 மாதங்களாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 4 கட்ட ஊரடங்கு முடிந்த பிறகு கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் Unlock 1 அதாவது தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஊரடங்கின் போது கொரோனா பாசிடிவ் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது ஆனால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இந்தியா கொரோனா

அதிலும் கடந்த சில வாரங்களாக இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது, இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 6,000-த்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவுக்கு ஆபத்து என WHO-வின் அவசரக்கால திட்ட நிர்வாக இயக்குநர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “இந்தியாவில் இன்னும் கொரோனா வைரஸ் வெடிக்கவில்லை, ஆனால் இந்த நேரத்தில் ஊரடங்கைத் தளத்தினால் நாடு அபாய கட்டத்தை அடையும்.
Also Read:
இந்தியாவில் தொற்றுநோய் பயணத்தின் திசை அதிவேகமாக இல்லை, இந்த சமயத்தில் அது மெது மெதுவாக அதிகரித்து வருகிறது. தொற்றுநோயின் தாக்கம் இந்தியாவின் நகர்ப்புற பகுதிக்கும் கிராமப்புறத்துக்கும் இடையில் வேறுபடுகிறது. இந்தியா மட்டுமல்ல தெற்காசிய நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள பல நாடுகளிலும் வைரஸ் வெடிக்கவில்லை ஆனால் இது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அதனால், பெரும் ஆபத்து ஏற்படும்.


மைக்கேல் ரியான்

இந்தியாவில் எடுக்கப்பட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வைரஸ் பரவலைக் குறைத்திருந்தன, ஆனால் மற்ற பெரிய நாடுகளைப் போலவே இந்தியாவும் ஊரடங்கைத் தளர்த்தி மக்களை வெளியில் செல்ல அனுமதிக்கையில், அங்கு மீண்டும் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ஊரடங்கைத் தளர்த்தினாலும் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களால் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என எச்சரித்துள்ளார்.

Subscribe Here