தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.6! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.6!

 -சென்னை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு குறித்த அறிவிக்கைகள் வெளியாகியுள்ளன.இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி ஸ்டேட் குவாலிட்டி மானிட்டர்ஸ் (சாலைகள்) பணியை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். இந்த பணிக்கு ஊதியமாக ரூ 9 ஆயிரம் வழங்கப்படும். அதுவும் தினசரி ஊதியமாக கொடுக்கப்படும். இந்த பணி குறித்த விவரங்களை http://www.tnrd.gov.in/ என்ற இணையதளம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 25 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்ற ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்க வேண்டும்.அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து பிடெக் அல்லது பிஇ (சிவில் அல்லது மெக்கானிக்கல்) படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 65 ஆக இருத்தல் வேண்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here